யோவான் 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
--
அவர்? யார் அவர்? பரிசுத்த ஆவியானவரே அவர்.
ஒரு ஆற்றலையோ, சக்தியையோ அவர் இவர் என்று அழைக்க மாட்டோம்.இப்படி நிறைய “ர்” போட்ட வசனங்கள் வேதத்தில் இருக்கிறது. பிரசங்கியில் இல்லை. அதனால் உங்க(கோவைபெரேயன்ஸ்) கண்ணுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.
என்றாலும் ஆளாகிய பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக் கொள்ளலாம். ஆற்றலையும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
இது பற்றி சகோ சந்தோஷ் எழுதியதை வாசித்து தெளிவு பெறுங்கள்.
--
அடுத்ததாக தன் நோக்கத்தை நிறைவேற்ற பரலோகத்தில் இருந்து அவன் மேல் தன் ஆவியை ஊற்றுகிறார். இதன் மூலம் அவன் சில குறிப்பிட்ட பணிகளை செய்யும்படி ஏவுகிறார் அல்லது அவனுக்கு சில வெளிப்பாட்டை கொடுக்கிறார் (அ) சந்தோஷத்தை அருளுகிறார் (அ) ஞானத்தை தருகிறார். இப்படியாக அவர் அந்த மனிதனுக்கு கொடுக்கும் ஆற்றலானது "பயன்பாட்டு ஆவி" என்றழைக்கப்படுகிறது. இது ஒரு தந்தை தன் மகனுக்கு கொடுக்கும் வெகுமதியை போன்றதாகும். இந்த ஆற்றலே மனிதனுக்கு தேவனால் அளிக்கப்படும் வெகுமதியாகும்.
இந்த வெகுமதியை பெறுவதை அனேகர் பரிசுத்த ஆவியானவரை பெறுவது என்பது போல போதிக்கின்றனர். அதனால் கேட்பவர்களும் குழம்பி விடுகின்றனர். தாங்கள் பரிசுத்த ஆவியானவரை ஏற்கனவே பெற்று விட்டோம் என்பதே இவர்களுக்கு தெரிய வருவதில்லை.
இந்த ஆவியானது மனிதன் பூமியில் உயிரோடு இருக்கும் போது மட்டுமே அவனுக்கு பயனுள்ளதாக இருக்கும். இறந்த பிறகு அவனுக்கு இந்த வெகுமதியால் எந்த பயனும் இல்லை. அவன் எந்த அளவுக்கு தனக்குள் உள்ள தேவனோடு இணைந்திருக்கிறான் என்பதே அவனுடைய நித்திய வாழ்வை தீர்மானிக்கும்.
தன்னுடைய நாமத்தில் அதிசயம் செய்த, தீர்க்கதரிசனம் உரைத்த, பிசாசுகளை துரத்தின ஊழியர்கள் கனி கொடுக்காத காரணத்தினால் அவர்களை அக்கிரம செய்கைக்காரர்கள் என தேவன் துரத்தி விடுவதை பார்க்கிறோம். இவர்கள் செய்த தவறு என்ன? தங்களுக்குள் இருந்த தேவனோடு இணைந்திருக்க தவறினதே இவர்கள் செய்த தவறு. ஊழியத்தை செய்தவர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும் தன்னோடு அவர்கள் இணைந்திருக்காத பட்சத்தில் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனை நிச்சயம் தர மாட்டார்.
ஒருவன் தேவன் அளிக்கும் ஆவியையும் பெற்று, அவனுக்குள் இருக்கும் ஆவியானவர் சொல்வதையும் கேட்டு, அதன்படியே செய்வான் எனில் அவன் கனி கொடுக்கிறவனாக, முழுவதும் நிறைவு பெற்றவனாக இருப்பான்.
ஆவியை பெறாமல், ஆவியானவரோடு ஒருவன் இணைந்து இருந்தாலும் ஒருவன் கனி கொடுக்க முடியும். ஆகவே அது தவறல்ல. அவன் தேவனிடம் வேண்டிக் கொண்டால் அவனுக்கு தன் ஆவியை தந்தருளுவார். இது தந்தையோடு கூட இருந்து அவரிடம் இருந்து எதையும் கேட்டு வாங்காமல் இருப்பதற்க்கு ஒப்பானதாகும்.
ஆனால் ஆவியை பெற்று கொண்டு ஆவியானவரை அலட்சியம் செய்தால் அவனுடைய ஆன்மிக வாழ்க்கை ரிஸ்க்கில் இருக்கிறது என்று அர்த்தம். இது தந்தை தந்த வெகுமதியை மாத்திரம் வைத்து கொண்டு தந்தையை வேண்டாம் என சொல்வதற்க்கு ஒப்பாகும்.
இப்படி ஒரு அனுபவத்தை அண்மையில் ஒருத்தன் அடைந்தான்;ஒரு மனுஷன் செத்துட்டதா நினைச்சு சங்கூதி பாலூத்தி புதைக்கற நேரத்திலே மனுஷன் முணங்குறான், ஐயோ நண்பா போயிட்டயே'னு அழுதவனெல்லாம் ஓடியே போயிட்டான், அப்புறம் வெட்டியானும் இன்னும் நாலு பேருமா சேந்து அவனைத் தூக்கி- அதான் அந்த பொணத்தை தூக்கிட்டு போய் ஆஸுபத்திரில சேத்தாங்க... அப்புறமென்ன, மூணு நாளைக்கப்புறம் மனுஷன் ஒரேயடியா போய் சேந்தான்.. என்ன முன்ன விட இப்ப அவன் சாவுக்கு கொறச்சலாகவே கூட்டம் வந்துருக்கும்..!
அதுபோலவே இங்கே கோல்டா கேட்டு வெச்ச கேள்வியும் இருக்கு... இந்த கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாத (மேசியாவின்) எதிரிகள் தோல்வியை ஒப்புத்துக்கவுமில்லே,அதே நேரத்திலே தோற்றதா காட்டிக்கவுமில்லே... இது எப்படியிருக்கு..? இதோ இந்த கேள்விகளையும் எங்க நண்பர்கள் மொழிபெயர்த்து போடப்போறாங்க...அதுக்குள்ளே அவரும் ரே ஸ்மித் சரக்கையெல்லாம் மொழிபெயர்த்து போடட்டும்...ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்..!
ஒருவேளை கோல்டா கொடுத்துள்ள தொடுப்புக்குள் செல்லுவதற்கு (மேசியாவின்) எதிரிகளுக்கு சங்கடமாக இருந்திருக்கும்;எனவே அவர்களுடைய வசதிக்காக இதோ அந்த ஐந்து கேள்விகள்...பதில் இருக்கா உங்களிடம்..?
அடடா இந்த கேள்விகளெல்லாம் யெகோவா சாட்சிக்காரங்களுக்கு தானே கேட்டிருக்காங்க, அப்படின்னு நீங்க எஸ்கேப் ஆகக்கூடாது சரியா, ஏனெனில் இந்த ஐந்து கேள்விகளும் உங்களுக்கும் பொருந்தும்; ஏனெனில் நீங்களெல்லாம் இரஸல் எனும் சர்ப்பத்தின் குட்டிகள் தானே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பு சகோதரர்கள் election duty பார்க்கப் போயிருப்பார்கள். அன்பு சகோதரி சொல்வதைக் கேளுங்கள் கொல்வின்!
மாற்கு 9:11,12,13. மேசியா வரும் முன்னே எலியா வர வேண்டும் என்று வசனம் சொல்கிறதே என்று கேட்டதற்கு ஆண்டவர் என்ன சொன்னார்? எலியா வந்தாயிற்று என்று. யோவான் ஸ்நானனைத்தான் சொன்னார். அவன் எலியாவின் ஆவியைக் கொண்டிருந்தான்.
என்னை யாரென்று சொல்கிறார்கள் என்று ஆண்டவர் கேட்டதற்கு, எரேமியா என்று சொல்கிறார்கள் என்றார்கள்.எரேமியா போல் இயேசு கிறிஸ்து கண்ணீர் வடித்ததை பார்த்திருப்பார்களோ?
அவர் ஒரு காந்தியவாதி என்று ஒருவரை சொன்னால் அவர் அஹிம்சாவாதி என்று அர்த்தம். கணக்கில் புலி என்றால், கணக்கில் புலி என்று அர்த்தம்!
காலேபின் ஆவி உள்ள இருக்கு என்று எங்க பாஸ்டர் அடிக்கடி சொல்லிக் கொள்வார். காலேபின் குணாதிசயம் எனக்கு இருக்கு என்பது தான் அதன் அர்த்தம்.
எப்போதும் இருக்கவேண்டிய கிறித்துவின் ஆவி தான்;எப்போதும் இருக்க வேண்டிய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறித்துவோடும் தான்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் ஆவிக்காகவும் தூதர்களுடைய பிரசன்னத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பவர்கள் பேசாமல் கத்தோலிக்கத்திலேயே இருந்திருக்கலாம்..!
இப்படி ரீல் சுத்திக்கொண்டிருப்போர் ஆச்சரியப்படும் வண்ணமாக அனைவரும் முன்னாள் கத்தோலிக்கர்களே; ப்ரன்ஹாம் முதல் சாதுஜி வரை அவ்வளவு ஏன் நம்ம அண்டைவீட்டு கோவை வெறியன் முதலாக கத்தோலிக்க அனுபவத்திலிருந்து விட்டில் பூச்சிகளாக சிதறித் தெறித்தவர்களே... இவர்களெல்லாம் மீட்கப்படுவது கூடாத காரியமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Bro Colvin: என்ன நினைச்சீங்களா? அதற்காகவா இவ்வளோ கஷ்டப்பட்டோம். இனி பதில்தர மாட்டோம் என்ற தோரணையில் எழுதியிருக்காங்களே!. நம்ம அருமை சகோதரர் ஜோன் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. எனது கட்டுரைகளுக்கும் பதில் இல்லை. இதிலிருந்து என்ன தெரியுது. தோற்றுட்டாங்கன்னு தானே!
Golda: தேவ தூதனின் காலை எப்படி மறைப்பது என்று, யோசித்துக் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நான் fail என்று சொன்னது, நரகம் போகப் போறாங்களே என்று! மிகவும் வருத்தமாக இருக்கிறது. நல்லா ஜெபம் பண்ணுங்க சகோ கொல்வின். ஒருத்தராவது அங்கேயிருந்து இங்க வர வேண்டாமா?
Bro Colvin: ஏனென்றால் தேவன் இவர்களுக்கு எலியாவின் ஆவியையும் யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளார்
சகோதரி கோல்டா ஒருத்தருக்குள்ள 3 ஆவிகள் எப்படி இருக்க முடியும். ஏஞ்சல் டி.வி சாதுவையை இவங்க தோற்கடித்து விட்டாங்களே. உங்க தாழமையான கருத்து என்னவோ!
Golda: எலியாவின் ஆவி, யோவானின் ஆவி கொண்டிருக்கிறேன் என்று சொல்வது தவறல்ல என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.
எனக்கு நெகேமியாவின் ஆவி இருக்கிறது என்று யாராவது சொன்னால், அவர்கள் தைரியசாலி என்று அர்த்தம் கொள்ளலாம்.
@கோல்டா: என்ன கேள்வினாலும் ஒரு பதில ரெடியா வச்சிருப்பாங்க, இல்லைன்னா கேள்விய choiceல விட்டுருவாங்க.
கடைசியில fail ஆகப் போறாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமாக இருக்கிறது.
என்ன நினைச்சீங்களா? அதற்காகவா இவ்வளோ கஷ்டப்பட்டோம். இனி பதில்தர மாட்டோம் என்ற தோரணையில் எழுதியிருக்காங்களே!. நம்ம அருமை சகோதரர் ஜோன் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. எனது கட்டுரைகளுக்கும் பதில் இல்லை. இதிலிருந்து என்ன தெரியுது. தோற்றுட்டாங்கன்னு தானே!
நேரடி விவாதத்திற்கும் வர மாட்டாங்களாம். பதில் தரவும் மாட்டாங்களாம். ரசலின் டம்மிக் கதைகள சொல்லுறதும் தேவதூதனுக்கு கால் இல்லன்னு சொல்லுறதும்,அனைத்தும் அறிந்த தேவன் எல்லாத்தையும் அறிய முற்பட மாட்டார்ன்னு சொல்லுறதும்தமிழ் நாடே பெருமை பட வேண்டிய வேதாகம கண்டுபி்டிப்புகள்.
ஏனென்றால் தேவன் இவர்களுக்கு எலியாவின் ஆவியையும் யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளார்
சகோதரி கோல்டா ஒருத்தருக்குள்ள 3 ஆவிகள் எப்படி இருக்க முடியும். ஏஞ்சல் டி.வி சாதுவையை இவங்க தோற்கடித்து விட்டாங்களே. உங்க தாழமையான கருத்து என்னவோ!