யோவான் 6:70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.
அவர் தெரிந்து கொண்டதும் சோடை போகத்தானே செய்தது. அப்ப தேவ சித்தத்தோடு மனித சித்தமும் கிரியை செய்கிறது என்றுதான் தெரிகிறது?
யோவான் 15:16 "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;..."
அப்போஸ்தலப் பணிக்கு ஆளெடுத்தார். அதாவது தெரிந்து கொண்டார். அவவளவுதான். அதே போல் எல்லோருக்கும் ஏதோ ஒரு பணி ஆண்டவ்ர் தெரிந்து வைத்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது.
II பேதுரு 1:10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
எல்லாம் தேவ சித்தம் என்றால், நம்முடைய பங்கு என்ன? ஒன்றும் கிடையாதா? அப்ப எதற்காக வேதம் நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது?
அதுவும் தேவசித்தமே...படிப்பதும் படிக்காமலிருப்பதும் படிக்கும்போது தலையை சொறிவதும் படிக்காமலிருந்தாலும் தலையை சொறிவதும் இப்படி வேதம் சம்பந்தமாக மாத்திரமாக மாத்திரமே ஆயிரக்கணக்கான தேவசித்தங்கள் உண்டு; அவற்றையெல்லாம் இங்கே நான் எழுதாமலிருப்பதும் தேவசித்தம், எழுதமாட்டேனா என்று நீங்கள் ஏங்காமலிருப்பதும் தேவசித்தம்; மொத்தத்தில் மனிதன் என்பவன் மிகப்பெரிய மடையன், அவனுக்கென்று ஒரு சித்தமும் கிடையாது; அவசரத்துக்கு ஒதுங்குவதும் தேவசித்தம் எழுந்துபோக சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு வண்ணானுக்கு வேலை தருவதும் தேவசித்தம்...
ஹலோ,கொஞ்சம் நிறுத்தறீங்களா,அப்ப நாங்கல்லாம் பின்னங்காலை எடுத்து காதை சொறிஞ்சுக்கறது கூட தேவசித்தமா என்று சொறிபிடித்த நாய் ஒன்று கேட்கிறது..!
(இந்த நல்ல நேரத்தில் பயம் சம்பந்தமாக தெனாலி படத்தில் நடிகர் பேசும் கமல்ஹாசன் பேசும் நீண்ட வசனத்தை யாரும் கற்பனை செய்யக்கூடாது; அதுல தேவ சித்தம், இதுல தேவசித்தம் என்று கண்டபடி யாரும் வசனம் எழுதவேண்டாம்.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பெரியன்ஸ் கவலைப்படுவதைப் பார்த்தால் எனக்கும் கவலையாக உள்ளது. ஆனால் இதுவும் தேவசித்தம்தான்.
நான் கவலைப்படுவதைப் பார்த்து பெரியன்ஸ் கவலைப்படுவாரா சந்தோஷப்படுவாரா என்பது தெரியவில்லை. ஆகிலும், அவர் கவலைப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான், சந்தோஷப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான்.
இப்படியே நாங்கள் இருவரும் மாறி மாறி கவலைப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான், சந்தோஷப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஒரு ஆளை பிடித்து தங்களது லிங்கில் சேர்க்கும்போது ரொம்ப மெனக்கெடுவார்கள். வேணாம் விடுங்க என சொன்னாலும் எப்படியாவது கன்வின்ஸ் பண்ண பார்ப்பார்கள். வேண்டாம் என ஒருவர் முடிவு செய்வது தேவசித்தம் என்றால் அதை மாற்ற ஏன் இவ்வளவு மெனக்கெடனும். என்னவோ போங்க இவங்க சொல்றத பாத்து தான் எது தேவசித்தம் என தெரியவேண்டியதா இருக்கு.//
soul:
//மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு நல்ல வியாபார வாய்ப்பு. வாழ்நாள் முழுவதும் சொற்ப சம்பளத்துக்காக உழைத்து அடுத்தவனைப் பணக்காரனாக்கும் தியாக எண்ணம் எனக்கில்லாததால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். யாரையும் நிர்ப்பந்தித்து தொழில் கற்றுக்கொடுக்குமளவு எனக்கு நேரமில்லை. அப்படி அவசியமுமில்லை. இது அனைவருக்கும் புரியவேண்டிய அவசியமுமில்லை.
அப்படித்தான் இருக்கும் நண்பரே! சகலமும் தேவ சித்தம் என்பதற்கு ஆதரவாக ஏகப்பட்ட வசனங்கள் பதித்தாயிற்று பதிலுக்கு மனிதனின் சகலமும் மனிதனின் சித்தம் என்பதற்கு ஒரு வசனத்தைக்கூடக் காணோம்.
யோவான் 15:16 "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;..."
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஒரு ஆளை பிடித்து தங்களது லிங்கில் சேர்க்கும்போது ரொம்ப மெனக்கெடுவார்கள். வேணாம் விடுங்க என சொன்னாலும் எப்படியாவது கன்வின்ஸ் பண்ண பார்ப்பார்கள். வேண்டாம் என ஒருவர் முடிவு செய்வது தேவசித்தம் என்றால் அதை மாற்ற ஏன் இவ்வளவு மெனக்கெடனும். என்னவோ போங்க இவங்க சொல்றத பாத்து தான் எது தேவசித்தம் என தெரியவேண்டியதா இருக்கு.
//உங்க கூட்டம் எப்படி ஜெபித்தாலும் அது தேவ சித்ததிற்கு விரோதமானதே!! ஏனென்றால், உங்கள் ஜெபங்கள் இப்படி தானே இருக்கும்,
மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.//
நடப்பது எல்லாம் தேவசித்தமே, தேவசித்தம் மட்டுந்தான் என்பது கோவைபெரியன்ஸின் இரட்டை நண்பர்களின் அசைக்கமுடியாத (?) நம்பிக்கை. பின்னர் எப்படி தேவசித்தத்திற்கு விரோதமாக சில்சாம் ஜெபிக்க முடியும்?
மத்தேயு 6:5-7-ல் இயேசு சொல்கிற ஆலோசனைப்படி ஜெபித்தாலும் அது தேவசித்தம் தான்; அந்த ஆலோசனைக்கு மாறாக ஜெபித்தாலும் அது தேவசித்தம் தான். ஏனெனில் நடப்பது எல்லாம் தேவசித்தமே என்பது பெரியன்ஸின் கோட்பாடு/நம்பிக்கை.
ஒருபுறம் “நடப்பது எல்லாம் தேவசித்தமே” எனச் சொல்லிவிட்டு, இப்போது தேவசித்தத்திற்கு விரோதமாக சில்சாம் ஜெபிப்பதாக பெரியன்ஸ் கூறுகிறார்.
ஒருவேளை வழக்கம்போல் பெரியன்ஸ் தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளாரோ?
அதாவது இரண்டாம் மரண கோட்பாட்டை எப்படி மாற்றிக்கொண்டாரோ அதேவிதமாக “எல்லாம் தேவசித்தமே” கோட்பாட்டையும் மாற்றிக்கொண்டாரோ?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது பெரியவர் அன்பு அவர்களின் தளத்தில் அண்மையில் எழுதியது...
கோவைபெரியன்ஸ்-ன் பதிவுகளில் மறுபடியும் குழப்பம்:
மனித சித்தம், தேவசித்தம்... திரியில் பெரியன்ஸ்:
//நாம் பேசுவது கூட நம் சிந்தையில் கிடையாதாம், நாம் என்ன பேச வேண்டுமோ அது அப்பவே சுட சுட நமக்கு அருளப்படுகிறதாம்!!//
மெத்தப்படித்த கோல்டா... திரியில் பெரியன்ஸ்:
//ஆச்சர்யமா தான் இருக்கிறது!!?? எப்படி தான் ஜெபம், உபவாசம் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் என்கிற ஆச்சரியம்!! வேதம் ஜெபத்தை குறித்து தெளிவாக எழுதியிருந்தும் இப்படி கூட்டம் போட்டும் கூச்சல் போட்டு, முற்சந்திகளிலும், வீதிகளிலும் நிற்பது தான் ஜெபம் என்கிறார்களே, ஆச்சரியம் தான்!! தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!! //
பெரியன்ஸ் இத்தனை ஆச்சரியப்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நாம் பேசுவது சிந்திப்பது எதுவுமே நம் கையில் இல்லை, எல்லாமே தேவசித்தம்தான் என்கிறார் பெரியன்ஸ். அப்படியானால் நாம் ஜெபிப்பது மட்டும் நம் கையிலா உள்ளது? நம் சுயசிந்தனைப்படியா ஜெபிக்கிறோம்?
நாம் பேசவேண்டியதை அருளுகிற தேவன் தானே நாம் ஜெபிக்கவேண்டியதையும் அருளுகிறார்? பின்னர் அதை எப்படி தேவசித்தப்படியான ஜெபம், மனித சித்தப்படியான ஜெபம் என பெரியன்ஸ் பிரித்துப் பார்க்கிறார்?
ஆதாம் தேவகட்டளையை மீறுவது முதல் நாம் செய்கிற அத்தனை அட்டூழியங்களும் தேவசித்தமே என்கிறார் பெரியன்ஸ். ஆதாரம்:
மெத்தப்படித்த கோல்டா... திரியில் பெரியன்ஸ்:
//மனித சித்தத்தில் தான் ஆதாம் பாவம் செய்வான் என்றும் அவன் பாவம் செய்ய போவது தேவனுக்கு தெரியாது என்பது அபத்தமான கூற்று!!//
//வேதத்தின் தேவன் தன்னையும் தன் சித்தத்தையும் வேதத்தில் எழுதியிருக்கிறார்!!
இது நடக்கும் என்கிறது வேதம், இது தேவ சித்தம்!! இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவது தேவ சித்தம்!!//
மேலேயுள்ள வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அட்டூழியங்கள் அனைத்தும் தேவசித்தமே என பெரியன்ஸ் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால் பெரியன்ஸ் மட்டும் தேவசித்தப்படி அட்டூழியங்கள் செய்யமாட்டாராம். அவர் அட்டூழியங்கள் செய்பவரை விட்டு விலகுவாராம், அதுவும் தேவசித்தம்தானாம்.
என்ன தலைசுற்றுகிறதா? உங்கள் தலைசுற்றுவதும் தேவசித்தம்தான். உங்கள் தலைசுற்றுக்கு என்ன நிவாரணம் என யோசித்து கலங்க வேண்டாம். நாம் என்ன பேசவேண்டும் என்பதை சுடச் சுட அருளுகிற தேவன், நம் தலை சுற்றுக்கான நிவாரணத்தையும் சுடச் சுட அருளுவார்.
இப்படி நான் எழுதுவதால் வேதவசனத்தை நான் பரியாசம் செய்வதாக யாரும் கருதவேண்டாம். வேதவசனத்தை பெரியன்ஸ் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவைத்தான் கூறியுள்ளேன்.
வேதவசனம் சொல்வது:
மத்தேயு 10:19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
கிறிஸ்துவினிமித்தம் அவரது சீஷர்கள் உபத்திரவத்திற்குள்ளாகி, அதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகையில், சீஷர்கள் என்ன பேசுவது எனக் கலங்க வேண்டாம் என சீஷர்களை ஆறுதல் படுத்தி, பின்வரும் வாக்குத்தத்தங்களையும் இயேசு சொன்னார்.
மத்தேயு 10:18 அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
பிதாவின் ஆவியானவர் சீஷர்களுக்குள் இருந்து, அவரே பேசுவார் எனும் இந்த வாக்குத்தத்தம் சீஷர்களுக்கு மட்டுமே உரியதாகும்.
ஆனால் பெரியன்ஸோ எல்லோருக்குள்ளும் இருந்து, பிதாவின் ஆவியானவர்தான் பேசுகிறார் என அபத்தமாகப் புரிந்துகொண்டுள்ளார். அவரது புரிந்துகொள்தலின்படி பார்த்தால், ஒவ்வொரு மனுஷரும் பேசுகிற தூஷணமான வார்த்தைகள் எல்லாவற்றையும் பிதாவின் ஆவியானவர்தான் அவர்களுக்குள் இருந்து பேசுகிறார் என்றாகிறது. இது எத்தனை அபத்தமானது?
எல்லாமே தேவசித்தம் எனும் பெரியன்ஸின் கோட்பாட்டின்படி பார்த்தால், மனிதர்களின் கொலை வெறியாட்டங்கள், இச்சை வெறியாட்டங்கள் அத்தனையும் தேவசித்தமே என்றாகிறது. அதாவது வன்முறையாளர்களின் கையில் அரிவாளையும், துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் தேவனே கொடுத்து, அவர்கள் வன்முறைகளை செயல்படுத்துவதற்கான ஞானத்தையும் கொடுத்தது போலாகிறது. நான் ஏதோ அதீதமாகச் சொல்வதாக யாரும் கருதவேண்டாம்.
2 தீமோ. 3:1-5 வசனங்களை பெரியன்ஸ் புரிந்துகொண்டதை மீண்டும் படித்துப்பார்த்தால், பெரியன்ஸ்-ன் கோட்பாடு பற்றிய எனது விளக்கம் சற்றும் அதீதமானதல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
பெரியன்ஸ்:
//வேதத்தின் தேவன் தன்னையும் தன் சித்தத்தையும் வேதத்தில் எழுதியிருக்கிறார்!!
இறைவன் எனும் தளத்தின் நிர்வாகியான சுந்தர் வித்தியாசமான கொள்கைகளுடையவர்; ஆனாலும் அதனை ஓங்கிச் சொல்லும் தைரியமில்லாதவர் மற்றும் அவருடைய கொள்கை கண்டுபிடிப்புகளுக்கு யாராவது எதிராகப் பேசிவிட்டால் நத்தைப் போல சுருங்கிப் போய் விவாதத்தை விட்டு ஓடிவிடுவார்; ஆனாலும் மறைமுக தாக்குதலைத் தொடருவார்; ஒரு காலத்தில் நாங்களெல்லாம் ஒன்றாக இருந்தோம்; இடையே ஏற்பட்ட கொள்கை மோதல்களால் பிரிய நேரிட்டது; ஆனாலும் அவரது பதிவுகளை நான் தினமும் கவனித்து வருகிறேன்; அவரும் நம்முடைய தளத்தைப் பார்வையிடுகிறார்; அதன் பாதிப்பு அவருடைய எழுத்துக்களில் எப்படியாவது ஓரிரு வரிகள் வெளிப்படும்;அண்மையில் (மேசியாவின்) எதிரிகள் மற்றும் பெரியவர் அன்பு ஆகியோர் இடையிலான விவாதத்தின் பாதிப்பில் சிலதை எழுதியிருக்கிறார்; ஆனாலும் இதில் யாரையும் இவர் புண்படுத்தாதது போலத் தோன்றினாலும் யாருக்கோ இதில் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறாரே என்று பார்த்தால் அவர் (மேசியாவின்) எதிரிகளுக்கு தான் சேதி அனுப்பியிருக்கிறார்; அவருடைய கட்டுரையின் ஒரு இடத்தில் நமக்கும் மறைமுகமாக ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார்;ஆனாலும் அதை நாம் காட்டிக்கொள்ளமுடியாது;ஏனெனில் அது பொதுவாக எழுதப்பட்டது என்று சமாளிப்பார்;இதுவே அவரது தந்திரமாகும். தொடர்ந்து அவர்களுக்கெதிரான தன்னுடைய கருத்துக்களை எழுதி வந்தாலும் அவர்களை நேரடியாகத் தொடாமல் பொத்தாம்பொதுவில் எழுதுவதால் இவருக்கு அடி விழுகிறதில்லை; ஆனாலும் எனது மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரிகள், சுந்தர் எனும் ஒரு நண்பர் இருந்ததையும் அவரைத் தாங்கள் போட்டுத் தாக்கியதையும் மறந்திருப்பார்கள்; அவருடைய அண்மைய எழுத்துக்கள் மூலம் (மேசியாவின்) எதிரிகளுக்கு சொல்லப்பட்டுள்ள சேதி என்ன என்பதை அவர்கள் கவனத்துக்காகக் கொண்டு வருகிறேன்;
எப்போதுமே ஒரு சம்பவத்தோடு சொந்த அனுபவம் போல துவங்கி இடையிடையே ஒன்றிரண்டு வசனத்தை சம்பந்தமில்லாமல் போட்டுவிட்டு கடைசி பத்திக்கு முந்திய பத்தியில் பஞ்ச் வைப்பது சுந்தருடைய பாணியாகும்;இதிலும் அப்படியே...
இந்த உலகத்தில் மனுஷனாக பிறக்கும் எல்லோருக்கும் எல்லாமே நிறைவாக இருப்பதில்லை. சிலருக்கு ஒருவேளை உணவு கூட இருக்காது, சிலருக்கு வசதி இருக்கும் ஆனால் அதை அனுபவிக்கும் உடல் நலம் இருக்காது. சிலர்க்கு சரியான வேலை இருக்காது, சிலருக்கு குழந்தை இருக்காது, சிலருக்கு தங்குவதற்கு வீடுகூட இருக்காது , சிலருக்கு போதுமான அறிவு இருக்காது இப்படி எல்லோருக்குமே ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் உலக சம்பந்தமான இந்த குறைகள் இருப்பவர்கள் எல்லாம் "இது தேவனின் சித்தம்" "நான் இப்படி இருக்க வேண்டும் என்பது அவர் நியமித்த விதி" "நான் இப்படியே இருந்துவிட்டு போகிறேன்" என்று இருக்கிறார்களா? இல்லையே!
தங்களால் முடிந்த மட்டும் தங்கள் தேவைகளை பூர்த்திசெய்ய பாடுபடுகிறார்கள். பண தேவை உள்ளவர்கள் எந்த இடத்தில் போய் சம்பாதித்தால் அதிகம் வருவாய் கிடக்கும் என்ன தொழில் செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்கின்றனர். வியாதி யுள்ளவர்கள் எதை தின்றால் அல்லது எங்குபோய் பார்த்தால் நோய் குணமாகும் என்று தேடி அலைகின்றனர். வீடு இல்லாதவர்கள் எப்படியாது ஒரு இடத்தை வாங்கவும் கடன் வாங்கியாவது ஒரு வீட்டை கட்டவும் பிரயாசம் எடுக்கின்றனர். பிள்ளை இல்லாதவர்கள் கோவில் குளம் மருத்துவர்கள், சாமியார்கள் என்று அலைந்து ஆலோசனை கேட்டாவது ஒரு குழந்தையை பெற்றுவிட துடிக்கின்றனர். போதிய அறிவில்லாதவர்கள் படித்து அறிவை பெற்றுக்கொள்ள விளைகின்றனர். யாருமே இது தேவனின் சித்தம் அப்படியே நடந்துவிட்டு போகட்டும் என்று இருப்பது இல்லை. பண விஷயங்களில் பத்து ரூபாயை கூட சரியாக கணக்கு பார்த்து வாங்குவதில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.
இவ்வாறு அழிந்து போகும் இந்த உலக தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்ற நினைக்கும் மனுஷர்கள் அவர்களின் ஆன்மீக தேவையான நித்தியத்துக்கடுத்த தேவைகளை தேடி கண்டடைவதில் எவ்வளவு அதிக அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்? ஆனால் அதில் அநேகர் போதிய
ஆர்வம் காடுவதில்லையே ஏன்? காரணம் சாத்தானால் உருவான நிர்விசாரமே தேவையற்ற அற்ப உலக காரியங்களை பெரியதாக காட்டும் அவன் தேவையான மகிமையின் காரியத்தின் மதிப்பை குறைத்து காட்டி ஜனங்களை மோசம் போக்குகிறான்.
ஒவொரு மனிதனுக்கும் உலகத்துக்கடுத்து காரியங்களில் குறைகள் இருப்பது போல தேவனுக்கடுத்த ஆவிக்குரிய காரியங்களிலும் ஏதாவது சில குறை நிறை இருக்கத்தான் செய்யும். சிலருக்கு எடுத்ததுடன் கோபம் வரும், சிலருக்கு பாலியல் ரீதியில் அதிகமான இச்சை இருக்கும். சிலருக்கு உலகபொருட்கள் பணத்தின்மேல் அதிக ஆசை இருக்கும், சிலருக்கு அடுத்தவரை கெடுத்து வம்புபேசுவதுதான் போழுதுபோக்காக இருக்கும். சிலருக்கு சோம்பேறித்தனம் இருக்கும் சிலருக்கு சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். இதில்சில காரியங்கள் அவர்கள் பிறவி குணமாக கூட இருக்கலாம் ஆனால் ஒரு மனுஷன் எப்படி தன்னுடய உலக தேவைகள் குறைகளை பூர்த்தி செய்ய போராடுகிறானோ அதே போல் நம்முடய வாழ்வில் அல்லது சரீரத்தில் இருக்கும் தேவனுக்கு பிடிக்காத காரியங்களையும் விட்டுவிலக போராடவேண்டும்.
உலகதேவையில் மட்டும் ஆண்டவர் நிர்ணயித்த நிலையில் திருப்தியடையாமல், அது அவருடைய சித்தம் என்று விட்டு விட்டாமல், எது அவரது சித்தம் என்று அறிய விரும்பாமல் நான் ஓடி ஓடி தொழில் செய்து கோடி கொடியாக பணம் சேர்ப்பேன், அனால் ஆன்மீக காரியங்கள் அல்லது தேவனுக்கடுத்த காரியங்கள் என்று வரும்போதுமட்டும், நான் என்னை திருத்தி தேவனுக்கேற்றபடி வாழ எந்த பிரயாசமும் எடுக்காமல் அது "தேவ சித்தம்" என்று நிர்விசாரமாக விட்டுவிடுவேன் என்பது எவ்விதத்திலாகிலும் சரியான காரியமா?
உண்மையாய் நீங்கள் "தேவனுடைய சித்தமே பெரியது, அதன்படிதான் எல்லாம் நடக்கும் என்றுஉறுதியாக எண்ணுவீர்களானால், உங்கள் உலககாரியங்கள் எதிலும் சொந்த மூளையையும் முயற்ச்சியையும் பயன்படுத்தாமல் "நீரே எனக்கு தஞ்சம் என்னை உம்முடய சித்தபடி நடத்தும்" என்று ஆண்டவரிடம் சரணண்டைந்து விடுங்கள். அவரே உங்களை தம்முடய சித்தப்படி சரியாக நடத்துவார்.
ஆனால் நீங்களோ உங்களின் உலக தேவைகள் மற்றும் விருப்பங்களை மட்டும் தேவனின் சித்தம் என்னவென்பதை அறிய விரும்பாமல் நீங்களே உங்கள் சொந்த முயற்ச்சியால் நிறைவேற்றிவிட்டு, தேவனுக்கு கீழ்படியும் காரியம் என்று வரும்போது மட்டும் அதற்க்கு சற்றும் பிரயாசம் எடுக்காமல் எல்லாமே தேவ சித்தம் அவரே பார்த்து கொள்வார் நாம் எதையும் கைகொள்ள வேண்டியதில்லை என்று சொல்லி தானும் இடறி, எல்லோரையும் இட்றவைப்பதில் எவ்வித நியாயமும் இல்லை, அது தேவனுக்கேற்ற கிரியையும் அல்ல என்பதே என் கருத்து!
உங்களுக்கு அப்படிஒரு விசுவாசம் இருக்கிறது என்றால் அதை உங்களோடு வைத்துகொண்டு மௌனமாக இருப்பதே மேல்!
மல்கியா 2:9நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல்வேதத்தைக்குறித்துப்பட்சபாதம்பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி-12:28)
இதில் முக்கியமாக அன்பு அவர்களுடைய கருத்தையொட்டியும் எல்லாமே தேவ சித்தம் எனும் (மேசியாவின்) எதிரிகளின் கருத்துக்கு எதிராகவும் சுந்தர் எழுதியிருப்பதை கவனிக்கலாம்;ஆனாலும் இவர்களெல்லாரும் ஒவ்வொரு காரணத்துக்காகப் பிரிந்துபோனார்கள்; (மேசியாவின்) எதிரிகள்பெரியவர் அன்பு அவர்களைப் பகைத்துக்கொள்வார்கள் என்பது நான் சற்றும் எதிர்பாராத திருப்பம் ஆகும்; இப்படியே மற்ற இரண்டு அலிகளும் (VNK & MLM Parties) தங்களுக்குள் அடித்துக்கொண்டு விலகி ஓடும் நாளும் வந்தே தீரும்.
பத்து கற்பனைகளைக் கைக்கொண்டாகவேண்டும் என்பதில் அன்புவும் சுந்தரும் ஒத்துப்போனாலும் இயேசுவும் தொழத்தக்கவர் என்ற கருத்தில் பிரிந்து நிற்கிறார்கள்;
இயேசு தொழத்தக்கவரல்ல என்ற கருத்தில் (மேசியாவின்) எதிரிகளுடன்அன்பு ஒத்துப்போனாலும் கிருபையா- கிரியையா என்பதில் பிரிந்து நிற்கிறார்கள்;
விரைவில் எது சரியானது என்பதை யௌவன ஜனம் தளமானது தமிழ் கிறித்தவ உலகத்துக்கு வெளிப்படுத்தும்; ஏனெனில் அந்த இரகசியமானது இயேசுகிறித்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்போருக்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதில் தானே அனைத்து மார்க்க பேதங்களும் மாறுபாடான உபதேசங்களும் மறைந்திருக்கிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நித்திய ஜீவன் தளத்தின் நிர்வாகியான அன்பு அவர்கள் தனது அற்புதமான வாதத் திறமையினால் (மேசியாவின்) எதிரிகளைப் பந்தாடி வருகிறார்; அறிஞர் அண்ணா சொல்லுவாராம், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்பதாக;அதனை நினைவுபடுத்துவது போலிருக்கிறது, திரு.அன்பு அவர்களின் வாதத் திறமை...
இவரைப் போல நாமும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் வாதம் செய்து சத்தியத்தை நிறுவவேண்டுமே என்ற ஆவலும் பிறக்கிறது; "யௌவன ஜனம்" சார்பில் அவரை மனதார வாழ்த்துகிறேன்;அவர் என்னை அழைக்கும் பட்சத்தில் அவருடைய தளத்திலேயே இந்த வாழ்த்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்;ஏற்கனவே நான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் காரணமாக யாருடைய தளத்திலும் உறுப்பினராக இணைவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்;"உன்னை யார் இங்கே அழைத்து கருத்து கேட்டது"என்று தூக்கியெறிந்து சிலர் பேசிய காரணத்தினால் நான் சிலரைவிட்டு விலகியே இருக்கிறேன்.
பெரியவர் அன்பு அவர்களின் நேர்த்தியான வாதத் திறமையை மீண்டும் மனதாரப் பாராட்டுவதில் பேருவகை கொள்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
SS: நீங்கள் அந்த யோனாவை போல் தான் அவரின் அன்பை புரிந்தவராக இருக்கிறீர்கள், ஆனால் நாங்கள் கர்த்தர் யோனாவிற்கு சொன்ன அன்பை புரிந்திருக்கிறோம்!! உங்களை பொறுத்தவரையில் தேவன் நீடிய சாந்தமும் தயவும் அன்பும் நிறைந்தவர் தான், ஆனாலும் அழிப்பார்!! எங்களை பொறுத்தவரை தேவன் காப்பார், ஜீவனை கொடுப்பார், நித்திய ஜீவனை தருவார், எல்லாருக்கும்!!
ஏன் ஆண்டவர் நினிவே பட்டணத்தாரை அழிக்கவில்லை என்று உங்கள் வேதம் சொல்கிறது?
// இனியும் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால், அடுத்தவர்கள் எதை எழுதுகிறார்களோ அதை எடுத்து போடுவது சிலருக்கு புதிய தொழிலாக இருக்கிறது!! இதுவும் தேவனின் சித்தம் தான்!! நம் தளத்தில் வந்து வாசிக்க முடியாதவர்கள், தேவ சித்தம் என்றால் என்ன என்பதை குறித்து அவரின் தளத்திலேயே வசிப்பது தேவனின் சித்தமாக தான் இருக்க முடியும்!! தேவ சித்தம் பலருக்கு நக்கலாகவும் நய்யாண்டியாகவும் தான் இருக்கும், ஏனென்றால் இவர்கள் ஊழியம் (!!) என்று ஒன்று செய்வது கூட இவர்களின் வல்லமையும், பேச்சு திறனிலும் தான் என்று நினைத்திருக்கிறார்கள்!! //
யார் யாரை சொல்லுவது என்று விவஸ்தையே இல்லாது போய்விட்ட கலிகாலம் போலும்;சொந்த செலவில் சொம்படித்துக்கொண்டிருக்கும் சிலர் இங்கிருந்து தலைப்புகளையும் அலப்புவதற்கான கருக்களையும் கடத்திக்கொண்டு போவதையெல்லாம் சௌகரியமாக மறந்து - மறைத்துவிட்டு நம்மை குறைகூறுகிறார்கள்; இதுவும் தேவசித்தம் தானோ..?
"அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
"சகலமும் தேவசித்தமே" என்பது வாநோகொ கூட்டத்தாரின் வாதம்; ஆனால் இதில் பெரியவர் அன்பு அவர்கள் மாறுபடுகிறார்; இந்த வயதிலும் ஐயா அவர்கள் நகைச்சுவையுணர்வுடனும் நிதானத்துடனும் நேர்த்தியாகவும் தனது வாதங்களை எடுத்துவைத்து (மேசியாவின்) எதிரிகளைப் பந்தாடிக்கொண்டிருக்கிறார்; அவருடைய வாதங்கள் அனைத்தையும் இங்கே பதிப்பது ஆகாத காரியம்; எனவே நான் வாசித்து இன்புற்ற சில வரிகளை மட்டுமே பதிக்கிறேன்; தயவுசெய்து சிரிப்பதற்கு ஆயத்தமாக படிக்கவும்.
சோல்சொல்யூஷன்:
//நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது யாவும் தேவ சித்தம். தேவசித்தம் மட்டுமே.//
anbu57
யாத்திராகமம் 32:9-14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
இங்கு மனுஷனாகிய மோசேயின் சித்தம் (அதாவது தேவன் தமது கோபத்தை விட்டு திரும்பி, இஸ்ரவேலர் அழியாதிருக்க வேண்டும் என்பது) நடந்ததா? அல்லது தேவசித்தம் (அதாவது இஸ்ரவேலரை அழித்துவிட்டு, மோசேயை பெரிய ஜாதியாக்குவது) நடந்ததா?
இதனிடையே துருபதேசங்களைக் குறித்த நம்முடைய தளத்தின் கட்டுரையை விமர்சித்து வாநோகொ கூட்டத்தாரின் தலைவன் உதாசீனமாக எழுதியவற்றை அவர்களுடைய எல்லாமே தேவசித்தம் கொள்கையை வைத்தே தேவபெரியவர் அன்பு அவர்கள் விமர்சித்த பாங்கு விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது.அது பின்வருமாறு...
soulsolution
சரியான உபதேசமே என்னவென்று சற்றும் அறியாத 'தேவ மனிதர்கள்' அடிப்படை சத்தியங்களான மரணம், ஆவி, ஆத்துமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், வாழ்நாள் முழுவதும் போலியை போதித்துக்கொண்டும், பிரசங்கம் செய்துகொண்டும் இருக்க சிருஷ்டிகராலே மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு, வஞ்சிக்கிற ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்படுவதாலேயே யோவான் இதைக் குறித்து திகைத்து ஆச்சரியப்படுகிறான்.......தற்கால பாபிலோனிய கிறிஸ்தவம் சேற்றில் மூழ்கிக்கொண்டு துருபதேசம் பற்றி எச்சரிக்கிறது. எங்கே நீங்கள் சொன்னதுபோல அடுத்த சபைக்கு போகவோ அல்லது அங்கு காணிக்கை அனுப்பவோ சொல்லுங்கள் பார்க்கலாம். 'இங்க பிரியாணி சாப்பிட்டுவிட்டு பக்கத்து ஹோட்டலில் பில் கட்டுவாயா?' என்று வெட்கமில்லாமல் கேட்பார்கள்.
நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் தேவசித்தம். நாம் பூரண பலனைப் பெறுவதும், பெறாதிருப்பதும் தேவசித்தப்படியே நடந்துவிட்டு போகட்டும். மனிதன் எச்சரிக்கையாயிருந்தால்தான் தேவன் அவனுக்கு பூரண பலனைக் கொடுக்கமுடியுமா? அது உண்மையெனில் அது தேவவல்லமையை அவமாக்கிவிடுமே!
(எல்லாம் தேவசித்தம் எனும் “உங்கள்” சித்தாந்தத்தின் அடிப்படையில் இக்கருத்து.எனது கருத்து: வசனம் சொல்கிறபடி நாம் எச்சரிக்கையாயிருந்தால்தான், தேவனால் நமக்கு பூரணபலனைத் தரமுடியும்)
சோல்சொல்யூஷன்:
//'இங்க பிரியாணி சாப்பிட்டுவிட்டு பக்கத்து ஹோட்டலில் பில் கட்டுவாயா?' என்று வெட்கமில்லாமல் கேட்பார்கள்.//
எல்லாம் தேவசித்தப்படி நடந்துவருகிறது. அவர்கள் இப்படிச் சொல்வதும் தேவசித்தம்தான். அவர்களை ஏன் வெட்கமில்லாதவர்கள் என்கிறீர்கள்?
எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடக்கின தேவன், அவர்களையும் கீழ்ப்படியாமைக்குள் அடக்கிவைத்துள்ளதால்தான் அவர்கள் இப்படி நடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இரக்கம்தானே கிடைக்கப்போகிறது?
தேவஇரக்கத்தைப் பெறப்போகிறவர்களைப் பார்த்து, ஏன் “வெட்கமில்லாதவர்கள்” என பரிகாசம் செய்கிறீர்கள்? ஓ, நீங்கள் இப்படிச் சொல்வதும் தேவசித்தம்தானோ? அதற்கு நான் இம்மாதிரி பதில் சொல்வதும் தேவசித்தம் தானோ?
சோல்சொல்யூஷன்:
//சரியான உபதேசமே என்னவென்று சற்றும் அறியாத 'தேவ மனிதர்கள்' அடிப்படை சத்தியங்களான மரணம், ஆவி, ஆத்துமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், வாழ்நாள் முழுவதும் போலியை போதித்துக்கொண்டும், பிரசங்கம் செய்துகொண்டும் இருக்க சிருஷ்டிகராலே மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு, வஞ்சிக்கிற ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்படுவதாலேயே யோவான் இதைக் குறித்து திகைத்து ஆச்சரியப்படுகிறான்....//
இதில் ஏன் யோவான் திகைத்து, ஆச்சரியப்படவேண்டும்? எல்லாம் தேவசித்தப்படியே நடக்கிறது என நீங்கள் அறிந்ததை யோவான் அறியவில்லையோ?
சோல்சொல்யூஷன்:
//திரித்துவக் கோமாளிகள்!//
என்ன சார் நியாயம் இது? தேவசித்தப்படியே நடந்துவருகிறவர்களைப் பார்த்து இப்படி சொல்வது நியாயம்தானா?
ஓ, நீங்கள் இப்படிச் சொல்வதும் தேவசித்தம்தானோ? இதை நான் அடிக்கடி மறந்துவிடுகிறேன். சாரி பிரதர்.
ஆனாலும் நான் இப்படிக் கேட்பதும் தேவசித்தம்தானே! அதனால் என்மீது கோபம் வேண்டாம் பிரதர்.
இல்லையில்லை. நீங்கள் கோபப்படுவதானால் தாராளமாகக் கோபப்படுங்கள். ஏனெனில் நீங்கள் கோபப்பட்டால் அதுவுங்கூட தேவசித்தம்தானே!
பெரியன்ஸ்:
//தேவ மனிதர்கள் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஒரே விசுவாசத்தை சேர்ந்தவர்களாக இருப்பதில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபையை சார்ந்தவராக இருக்கிறார்கள்!! இவர்கள் அனைவரும் ஒரே விசுவாசத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்களென்றால், தங்கள் சபைக்கு வருவோரிடம் பிற சபைகளுக்கும் போய் வாருங்கள் என்று சொல்லுவார்கள், ஆனால் இவர்கள் ஒரே விசுவாசத்தை கொண்டிராதவர்களாக இருப்பதினால் தங்கள் சபைக்கு வருவோரை பிற சபைக்கு போகக்கூடாது என்று போதிக்கிறார்கள்!! இது என்ன நாடகம்!!//
என்ன பிரதர் இப்படி வருத்தப்படுகிறீர்கள்? இந்த நாடகம் எல்லாவற்றையும் தேவன்தானே அரங்கேற்றி வருகிறார்? அவரது சித்தம் இல்லாமல் யாராவது இந்த நாடகத்தை நடத்த முடியுமா?
இந்த நாடகத்தில் தேவனுக்கும் பங்கு உண்டு. இதை நான் சொல்லவில்லை, நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆம், நடப்பது எல்லாம் தேவசித்தமே என ஒரு வரியில் நீங்கள் தானே சொல்லியுள்ளீர்கள்?
பெரியன்ஸ்:
//துருபதேசங்களை குறித்து ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது!! என்ன ஒரு கொடுமையென்றால்,//
கொடுமையாக இருந்தாலும், அதுதான் தேவசித்தம் சகோதரரே!
bereans
சகோ அன்பு அவர்களே,
நீங்கள் தேவசித்தத்தை கொச்சைப்படுத்துவதாக எழுதுகிறீர்கள்!! வேண்டாம் என்று நினைக்கிறேன்!! நடப்பது எல்லாம் தேவனின்சித்தம் தான்!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)