Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 'உடுத்தாரை உண்டி வினவுவார் ரில்'- பழமொழி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
'உடுத்தாரை உண்டி வினவுவார் ரில்'- பழமொழி
Permalink  
 


இன்று காலை 7 மணிக்கு கலைஞர் டிவியில் மங்கையர் உலகம் எனும் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக சொல்லப்பட்ட 'நறுக்' கருத்து...

'உடுத்தாரை உண்டி வினவுவார் ரில்' எனும் பழமொழியிலிருந்து சொல்லப்பட்டது; அதன் முழு விவரத்தையும் இணையதளத்திலிருந்து தேடியெடுத்து பதிக்கிறேன்;இது உலகத்தாருக்கு மட்டுமல்ல, இயேசுகிறித்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பஞ்ச பரதேசிகளைப் போல வேடமிடுவோருக்கும் ஓயாமல் பணத்தைக் குறித்தே பேசிக்கொண்டிருப்போருக்கும் பொருத்தமானது தானே..?

பிச்சைக்காரர்


இதோ பழமொழியின் விளக்கவுரையை கவனிப்போம்.

329. அகத்தா லழிவுபெரிதாயக் கண்ணும்
புறத்தாற் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை
உண்டி வினவுவா ரில்.

(சொ-ள்.) படுக்கை இலர் ஆய கண்ணும் - படுத்தற்கு ஒரு சிறிய இடம் இலராயவிடத்தும், உடுத்தாரை உண்டி வினவுவார் இல் - சிறப்புற ஆடை உடுத்தாரை வறியராகக் கருதி உண்டிவேண்டுமோ என்று கேட்பார் ஒருவருமிலர். (ஆதலால்), அகத்தால் அழிவு பெரிது ஆய கண்ணும் - மனையின்கண் வறுமை மிக்க இடத்தும், எனைத்தும் புறத்தால் பொலிவ உறல் வேண்டும் - எப்படியாயினும் புறத்தோற்றத்தால் பொலிவுற்று விளங்குதல் வேண்டும்.

பிச்சைக்காரர்

(க-து.) புறத்தோற்றப் பொலிவும் வேண்டப்படுவதொன்றாகும்.

(வி-ம்.) 'பெரிதாயக் கண்ணும்' என்றமையால், செல்வம் உள்ள காலத்தே அணிபெற இருத்தல் சொல்லாமே பெறப்பட்டது. வறுமையை 'அழிவு' என்றார், ஆக்கவேலை யின்றி அழிவினையே மேற்கொண்டு அது செய்தலின். 'குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்' என்று அதன் தொழிலைப் பிறரும் கூறினார். படுக்கை அதற்குரிய இடத்தின்மேல் நின்றது. சிறப்புற ஆடை அணிவாரை யாரும் இரப்போராகக் கருதார் என்பார், 'உடுத்தாரை உண்டி வினவுவார் இல்' என்றார்.

'உடுத்தாரை உண்டி வினவுவார் ரில்' என்பது பழமொழி.

பதினெண் கீழ்க்கணக்கு
 
முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி

ம. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் உரை

http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=45&auth_pub_id=49&pno=231


http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=45&auth_pub_id=49&pno=232



பின்குறிப்பு: என்னைப் போன்றோர் பள்ளி காலத்தில் இதையெல்லாம் இரசித்து படிக்காததால் தற்காலத்தில் கஷ்டப்படுகிறோம்; கவலையற்று இன்புற்று திரிந்த காலங்களை வீணாக்கிவிட்டோமே என்ற ஏக்கம் இப்போதும் உண்டு; எனவே தற்கால மாணவக் கண்மணிகள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்திடவும் வேண்டுகிறேன்.

மேலும் பழமொழி உரைகளை ரசித்து மகிழ தொடுப்பைத் தொடரவும்;தாங்கள் ரசித்து மகிழ்ந்த அனுபவங்களையும் அதில் வெளிப்படும் வேதாகமக் கருத்துக்களையும் இங்கே பகிரவும்.

http://www.tamilvu.org/library/l2A00/html/l2A00bod.htm



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard