எது டாக்டர் பட்டம் கொடுப்பது தவறு என்கிறீர்களா, ஆமோஸுக்கு கொடுத்தது தவறு என்கிறீர்களா..? அப்படியானால் நீங்கள் (எனக்காக..?) செய்ய வேண்டியது, உடனடியாக எருசலேம் பல்கலைப்பழகத்துக்கு ஒரு இமெயில்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
என்னமோ நடக்குது உலகத்திலே! சுட சுட செய்திகளை தருவதற்காக நன்றி சில்சாம் அவர்களே! அது என்ன டாகடர் பட்டம்? ஆராய்ச்சி செய்து வாங்கியதா? கௌரவ டாக்டர் பட்டமா?
விழுந்து விழுந்து விலா நோக சிரித்தாலும் என் சோகம் தீராதடி செல்லக்கிளியே என்று பாரதியார் பாடாத குறைதான்..!
நல்ல கேள்வி கேட்டீர்கள், கௌரவ டாக்டர் பட்டத்தை கௌரவமானவர்களுக்குத் தானே கொடுப்பார்கள், ஆமோஸ் என்ன டெண்டுல்கரா என்ன அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க..?
வெள்ளை பன்னிங்க பணத்தை அனுப்பியிருக்கு, அதில் கொஞ்சம் கட்டிங் போக மீதத்தை இங்கே வெட்டிங் பண்ணியிருப்பாங்க, கூடவே இந்த ஆள் எதையாவது கிறுக்கி அனுப்பியிருப்பார், உடனே டாக்டர் பட்டம் தான்..!
ஏன் உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா,என்ன..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஓயாமல் ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக புழுதி கிளப்பிவந்த (மேசியாவின்) எதிரிகளில் ஒருவரான ஆமோஸ் (எ) மூ.மூகேந்திரன் என்பவர் அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறாராம்; இதனை அவர் தனது "சத்தியத்தின் வழி" பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வேதமாணவரான இவர் வேத டாக்டர் ஆனதே ஒரு பெரிய சோகக் கதையாகும், இவர் டாக்டர் பெற்ற பல்கலைக்கழகமானது திரித்துவ உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்; காகிதப் புலிகளான வேதமாணாக்கர் குழுவினர் எப்படி கொஞ்சமும் வெட்கமில்லாமல் இயேசுவானவரைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொண்டோரிடம் சென்று டாகுட்டர் பட்டம் வாங்கி பெருமையடைகிறார்களோ..?
நம்முடைய எருசலேம் பல்கலைக்கழகமானது திரித்துவ உபதேசத்தை நம்புகிறது என்று நினைக்கிறேன்; அதனுடன் பல முன்னணி கிறிஸ்தவ தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது; ஆனால் அண்மையில் ஒரு பத்திரிகையில் வெளியான அறிவிப்பு அதிர்ச்சியளித்தது;அதாவது "சத்தியத்தின் வழி" என்றொரு பத்திரிகையில் அதன் ஆசிரியரான ஆமோஸ் (எ) மூ.மூகேந்தரன் என்பாருக்கு எருசலேம் பல்கலைக்கழகமானது டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், திரு.ஆமோஸ் அவர்கள் இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுதலிப்பவர்,ஆத்மாவின் நிலையைக் குறித்தும் மாறுபாடான கொள்கையுடையவர்;திரித்துவ உபதேசத்துக்கும் எதிரானவர். அவருடைய பத்திரிகையை வாசிப்போருக்கு இது நன்கு தெரியும்;ஆனால் நம்முடைய பல்கலைக்கழகமானது சற்றும் ஆராயாமல் ஒரு துருபதேசக்காரருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறதோ என்று அஞ்சுகிறேன்.
ஏனெனில் இவருடைய பின்னணியானது பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்தையும் உபதேசத்தையும் மறுக்கும் யெகோவா சாட்சிகளின் ஸ்தாபகரான இரஸல் என்பாருடைய உபதேசத்தைத் தழுவியதாகும்.இது குறித்து நண்பர்கள் எச்சரிப்படையவும் மற்றவரை எச்சரிக்கவும் வேண்டுகிறேன்;இது சம்பந்தமான எந்தவொரு காரியத்தையும் நிரூபிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.
இரண்டு தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்;ஒன்று,எருசலேம் பல்கலைக்கழகம் தனது மாணவர்களின் தரத்தை ஆராயாமலே பட்டங்களை வாரி வழங்குகிறது;அல்லது அது துருபதேசக்காரர்களைப் பின்னணியாகக் கொண்டு கிறிஸ்தவத் தலைவர்களை ஏமாற்றி சபைகளுக்குள் ஊடுறுவியிருக்கிறது; அதைக் குறித்து விவரமறிந்தவர்கள் ஆராய்ந்து அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.