Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: கிறிஸ்தவ ஊடகம்-Christian Media
கிறிஸ்தவ ஊடகம்-Christian Media

No New Posts   இரட்சிப்பு எனும் ஆப்ஸ்..!

July 22, 2014

இந்த கணிணி உலகில் ஏகப்பட்ட ஆப்ஸ் இருக்கிறது. அவற்றை அமைக்கும் முன்பே நாம் அவற்றை நம்புவதற்கு தூண்டப்படுகிறோம்.விரைவில் அமைக்கிறோம்.எளிதில் அதனை நீக்குகிறதில்லை. அவ்வாறே வாழ்க்கைக்கான மிகச் சிறந்த ஆப்ஸ் ஒன்று இந்த குறும்படத்தில் குறும்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. வழக்கம் போல நாம் அதனை... 

# நம்பவேண்டும்

# விரைந்து அமைத்துக்கொள்ளவேண்டும்

# ஒருபோதும் நீங்கிவிடக்கூடாது.


No New Posts   கழுகைப் போல எழும்பு - டார்வின் எபநேசர்

June 15, 2014

இளம்போதகரும் ஆராதனை வீரருமான டார்வின் எபநேசர் அவர்களின் ஆர்ப்பாட்டமான செய்தி.

No New Posts   மல்கியா 4-ம் அதிகாரத்திலிருந்து பாடம் - அறிவர் சுரேஷ் ராமச்சந்திரன்

June 15, 2014

அறிவர். சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். தேர்ந்த வேத வல்லுனர். வேதத்தின் கருகலான பகுதிகளை எளிமையாக விளக்கும் ஆற்றல்பெற்றவர். அவரது செய்திகளை இந்த திரியில் தொகுக்கிறோம்.

 

No New Posts   "பழைய மனிதன்"-புத்தம் புதிய குறும்படம்

November 29, 2013

"பழைய மனிதன்" - எனும் புத்தம் புதிய குறும்படம்.

இளைஞர்களின் கூட்டு முயற்சி.
சிற்றின்பம் எச்சரிக்கை...

அது நடைபிணமாக்கிவிடும்.


 

No New Posts   வேசித்தனமாகிவிட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்..!

November 29, 2013

கிறிஸ்தவம் வியாபாரமயமாகி வருவதன் சரியான அடையாளம் இதுவே. இதுபோன்ற உலகப் பிரகாரமான காரியங்களுக்கு விலகியிருக்கவே பலர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள். உண்மையான கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவைப் பற்றி அறியாதோர்க்கு அவரை அறிவிப்பதாகும்.



செக்கு மாட்டைப் போல பெருநகரங்களையே சுற்றிசுற்றி வந்து பருத்து பெருத்துவிட்ட பெருச்சாளிகளைக் குறித்து நாம் நிச்சயம் எச்சரிக்கவும் எச்சரிக்கப்படவும் வேண்டும். சர்க்கஸ் கோமாளிகள் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் யோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இவர்களோ தொப்பையும் முகமூடியும் அணியாமலே கிறிஸ்மஸ் தாத்தா போல கலாட்டா பண்ணுகிறார்கள்.

தீனி விளையாட்டு கொண்டாட்டம் எல்லாம் இலவசமா என்றால் நிச்சயம் இருக்காது. எல்லாமே பிஸினஸ் தான். எப்படி ஒரு இஸ்லாமியர் தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் போன வருடம் வாங்கி விற்காமல் போன அட்டை நட்சத்திங்களை எடுத்து வியாபாரத்துக்காகத் தொங்க விடுகிறாரோ அதேபோல இவர்களும் சீஸனுக்கேற்ற வியாபாரத்தில் பின்னியெடுக்கிறார்கள். ஹோலி லேண்ட் டூர் முதலாக அனைத்துமே சீஸன் பிஸினஸ் தான் இவர்களுக்கு. மேலும் இதைவிட தூய்மையாகவே கத்தோலிக்கர்கள் பண்டிகை கொண்டாடுவார்கள். இவர்கள் அதிலிருந்து பிரிந்தவர்களும் அல்ல. இவர்கள் யாரோ எந்த சந்ததியோ தெரியவில்லை. இவர்களுடைய சரியான பெற்றோர் யார் என்றும் தெரியவில்லை.

உபாகமம் 32:5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.

II கொரிந்தியர் 6:17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

No New Posts   தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!

December 7, 2010

இவர்களே தென்னகத்தின் தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!

149147_462635659002_516584002_5685760_808214_n.jpg


http://www.facebook.com/photos.php?id=532537043#!/album.php?profile=1&id=516584002


28268_408808697043_532537043_4295657_1824475_n.jpg

74836_470254232043_532537043_5562367_902236_n.jpg

155220_480089802043_532537043_5703043_7903210_n.jpg


http://www.facebook.com/gerssonedinbaro#!/album.php?id=532537043&aid=215845



இதில் நண்பர் ஷிஜூ அவர்களின் ப்ரொஃபைலில் நான் ஒரு காமெண்ட் போட அது ஒரு பெரிய விவாதமாகி விட்டது...பிறகு அவை நீக்கப்பட்டுவிட்டது;அதில் நான் குறிப்பிட்டது இதுதான்: "அன்பான நண்பரே நீங்கள் ஒரு தேவனுடைய மனிதன் ஊழியர் என்ற முறையில் இதுபோன்ற தோற்றங்களில் உங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்;உங்கள் மனைவி உங்களுக்கு மட்டுமே அழகாக இருந்தால் போதுமானது" என்று கூறியிருந்தேன்.

அதற்கு பதிலளித்த பலரும், உங்கள் பார்வை தவறு,ஆண்டவருடைய பார்வையில் இது விரும்பத்தகாததல்ல (not displeasing),நீங்கள் உலகம் பார்ப்பது போல பார்க்கக்கூடாது என்று எனக்கு புத்தி சொல்லியிருந்தனர்.

அது இன்றைய கிறித்தவத்தின் மனநிலைக்கு ஒரு சரியான உதாரணமாகவும் விளங்குகிறது..!

No New Posts   ரயில் பயணத்தில் ஓர் நற்செய்தி..!

June 5, 2013

>) நம்முடைய வாழ்வின் துவக்கத்தில் நம்மோடு இருப்போர் இறுதிவரை இருப்பதில்லை. நம்முடைய வாழ்க்கையின் பாதியில் இணைந்துகொள்ளுவோர் இறுதிவரை இருப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கையின் துவக்கத்தையும் நிறைவையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஆண்டவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

இந்த காணொளியிலிருந்து....

டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் ஒருவனைப் பார்த்து கோபத்துடன் டிக்கெட் பரிசோதகர் சொல்லுகிறார்,”இவனை விடுங்க சார், இவனையெல்லாம் போலீஸில் ஒப்படைத்து முட்டிக்கு முட்டி தட்டினால் தான் புத்திவரும்...”

காப்பாற்றும் நண்பர் சொல்லுகிறார்,”ஏன் சார் உங்களைப் பார்த்தா புத்திசாலி மாதிரி தெரியுது, அப்படியானா உங்களையெல்லாம் முட்டிக்கு முட்டி தள்ளினாங்களா, என்ன ? விடுங்க சார், யாரும் யோக்கியமில்லை...”

No New Posts   சிறுபிள்ளைத்தனமான ஜெப முயற்சிகள்..?!

November 8, 2013

 


PASTOR JOSEPH BALACHANDRAN PRAYING FOR JERUSALEM FROM THE 24 HOURS PRAYER ROOM AT THE ISRAEL PRAYER TOWER. ///

இது சகோ.பால் தினகரன் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தின் செய்தியாகும். மற்றொரு சகோதரி பகிர்ந்த இதனைப் பார்த்ததும் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். தேர்ந்த அப்போஸ்தலர்களான ஜோசப் பாலச்சந்திரன் போன்றவர்களே இப்படிப்பட்ட செயல்களை ஊக்குவிகலாமா என்பதே என் மனதில் எழுந்த கேள்வியாகும். இவையெல்லாம் பிதாவின் கட்டளைகளில் சொல்லப்படவில்லை. உலகப் பிரகாரமான எருசலேமுக்காக நாம் ஆயத்தப்படவில்லை. பரம எருசலேம் தானே நம் இலக்கு ? மாம்சத்தின்படியான யூதரோடு நமக்கு என்ன உறவு ? நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலர் அல்லவா ? இந்த நவீன யுகத்தின் இதுபோன்ற கூத்துக்களை நாம் வேடிக்கை பார்த்தால் போதும். அதற்குள் கர்த்தரே வந்துவிடுவார்.

இனி ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருக்கும் காமெண்டுகளின் தொகுப்பு...

  •  
    என் தேசம் இங்கே அழிகிறது............. அங்கே என்ன வேண்டுதல் ???

    மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து....
    ...
     
     
    செய்யவேண்டியதை செய்யாமல் வேண்டாததையெல்லாம் செய்து...எல்லாம் வியாபார மயம்....மீடியா அட்ராக்‌ஷன் நாடி...
     
     
  •  
    சகல ஜாதிகளையும் சீஷராக்கி....
     
     
  •  
    மத்தேயு 10:5 இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
     
     
  •  
    ரோமர் 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
     
     
  •  
    எரேமியா 23:23 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
     
     
  •  
    இப்ப உலகம் சுருங்கி விட்டது..தூரம் ஒரு பொருட்டு அல்ல..
     
     
  •  
    I கொரிந்தியர் 14:4 அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

    சின்ன மாற்று சிந்தனை. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்கள் அவரவர் பக்திவிருத்திக்கே பயன்படும். நான் இங்கிருந்தே எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டுதல் செய்தல் போதுமானது. இதுபோல பெரிய கோபுரத்திலிருந்து ஜெபிக்க எங்கும் கட்டளையிடப்படவில்லையே ?! மாறாக நம் ஆண்டவர் எங்கும் சுற்றித் திரிந்தாரே ?!
     
     
  •  
    ஆபிரகாமை நான் சொல்லும் இடத்திற்கு போ என்று சொன்னாரே

    தோமா இந்தியா வந்தாரே...அங்கிருந்தே ஜெபித்திருக்கலாமே..


    பவுலும் பல நாடுகளுக்கு ஊழியப் பயணம் செய்தாரே
     
     
  •  
    Jasmine Golda இப்ப உலகம் சுருங்கி விட்டது..தூரம் ஒரு பொருட்டு அல்ல.. ///

    அப்படியானால் அங்கே பல கோடி செலவில் கட்டிடத்துக்கு அவசியம் என்ன ? காரணம் ரொம்ப சிம்பிள் மனுஷன் வாழ்வதற்கு ஒரு காரணமும் இலக்கும் வேண்டும். அது இல்லாவிட்டால் அவன் அழிந்துவிடுவான். அதேபோல இதுபோன்ற புதுப்புது திட்டங்கள் இல்லாவிட்டால் ஊழியத்தில் ஒரு பரபரப்பு - ஃப்ளோ இல்லாமல் போய்விடும். அதை கடவுள் பெயரால் செய்கிறோம். அவ்வளவு தான்.
     
     
  •  
    Jasmine Golda ஆபிரகாமை நான் சொல்லும் இடத்திற்கு போ என்று சொன்னாரே

    தோமா இந்தியா வந்தாரே...அங்கிருந்தே ஜெபித்திருக்கலாமே..

    பவுலும் பல நாடுகளுக்கு ஊழியப் பயணம் செய்தாரே ///

    யெஸ். அப்படியே நாமும் செல்லுவதில் தவறில்லை. ஆனால் இப்படியல்ல. இது கம்பெனி ஸ்டைல் - எம் என் ஸி கம்பெனி ஸ்டைல். நானும் ஒரு முன்னாள் வியாபாரி தான் மேடம். சாரி.

No New Posts   இங்கே ஒருத்தர் நரகத்துக்கே போயிட்டு வந்திருக்கார்...டிஜிஎஸ் ஐயா மேல அவ்ளோ வெறி ?!

September 3, 2013

  • balaji premkumar

    செத்து போன தினகரனை கர்த்தராகிய எசுக்ரிஷ்து நரகத்தில் வைத்து "என்பெரசொல்லிய ப்ரோட் பண்ணுன என்று " குமிர் இருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது

    ·
  • Robin Wilfred
  • Francis Somerwell

    the question is are these men whom Bro. DGS tries to protect are truly called by God for His mission or these men are like the self appointed prophets we see in Jeremiah?

    whatever Bro. DGS spoke here is highly a irrelevant subject to the word of God. A true child of God will not be scared with this heretic message.

    ·
  • Francis Somerwell

    truly anointed ones will not boast about it, rather it is seen, I challenge the one who self-proclaim is not anointed. Here Bro. DGS was scared and using God's name without any biblical context.

    if he says some are punished for criticizing God's servants, then can we revert back and ask for what reason his daughter was punished?

     

    Report this video

    Thank you for submitting your report. Here is the information we received from you:

    Issue reported:

    Hateful or abusive content > Abusing vulnerable individuals

    Timestamp selected:

    01:02

    Additional details:

    It is indirectly abusing a celebrity. Please see the comments. So kindly remove it immediately.

     

No New Posts   என்ன சொல்ல வர்றாங்க புரியலையே ???

August 14, 2013

revivalbannerad.png

 

என்ன சொல்ல வர்றாங்க புரியலையே ???

No New Posts   கனடாவுக்கு ஒரு அப்பா..!?

July 26, 2013

அது என்ன, கனடாவுக்கு தான் அப்பாவாகப் போகணுமா ?

எங்க ஊர் டொம்மி குப்பத்துக்கு அப்பாவாக வரக்கூடாதா ?

Gathering of God’s Generals

233132064_640God was going to transport my Spiritual Father, Shyju Mathew(the one in the pic) from India to Canada for ministry. Before He left, a meeting was organized-“Generals Meet”. God’s Generals from different parts of my country who were mentored by Shyju Mathew were invited. We went and got transferred to another level in our life and ministry. It’s a joy to share what I learned.

Points worth more than Gold:

Here are a few points from the meeting. Sit back and receive:

  • The Mistakes of our Fathers (Spiritual leaders) are for us to learn and not to criticize.
  • Greater your revelation of Jesus, greater the impact.
  • Before every service, wait till you have an encounter with God. Pray more after the service.
  • We can only imitate the style of preachers, we can’t imitate their anointing.
  • Don’t desire for respect that God has not allowed.
  • If you are exposed before your time, you will be killed.
  • Fame kills. Give all the Glory to God.
  • Don’t talk anything that doesn’t glorify God. Filter your words.
  • It is greater to be a friend of God than to be a man of God.(Most important point)
  • A Spiritual leader is incomplete if He is not a Father. (We don’t have many Fathers)
  • Don’t walk with corrupted leaders.
  • The day you feel you have arrived is the day you will die.
  • The Biggest challenge is the spirit of pride not the spirit of lust. When you fall for lust, God will help you. When you fall for pride, God will fight you.
  • Don’t go in faith, “Go with God”. If you are not full of God, God won’t manifest.
  • Don’t pursue ministry, pursue God.
  • Ministry can happen without God. (Death-blow)

God touched me:

God touched me. It was both awesome and terrible. Awesome, because He pulled me closer to Him. Terrible, because I was exposed of my shortcomings. My life is different after my encounter with God in the meeting. It was like God pulling me and saying-“Son, It’s time to walk with me, the “real” way”. The best part is that our time with God as a couple became “heavenly” after the meeting.

I believe it was life-changing for all the men and women of God who attended. I believe that historic meet was organized by God to precede something greater, a historic revival. Wohooooo!! “God is coming to India”. My land is going to see revival!

Running after God:

It is heart-breaking to see believers pursue the things of this world. It is heart-breaking to see men of God pursue ministry. The primary call of every Christian is to run after God’s heart and everything else comes next. We want God and the world but the Bible says we can’t be a friend of God if we are a friend of this world.

You should know that loving the world is the same as hating God. Anyone who wants to be a friend of the world becomes God’s enemy. James 4:4(NCV)

When the Israelites stayed at a distance, Moses walked into the thick darkness where God was. Do we have people like Moses who will run after God till they encounter him? Are we ready to leave everything behind and run after God?

Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength and with all your mind. Luke 10:27(NIV)

Prayer:

Daddy, we have fallen short in everything. We are so taken away by our lives. We are coming back to you. We want to live for you 100 per cent. We want to make you happy. We want to be busy with you. Receive us Daddy!

In Jesus’ Name.

God has a “unique” plan and purpose for your life. Will you run after God?



-- Edited by HMV on Saturday 27th of July 2013 07:23:32 AM

Started By: HMV

Comments: 0

Views: 3824

Last Post: Jul 27, 2013 by HMV

 

No New Posts   மதுரை சம்பவம் திரைப்பட டைரக்டர் Rev.Eureka..?

November 30, 2011

Posted@facebook

இந்த படத்தின் டைரக்டர் யுரேகா என்பவர் ஈரோட்டில் வைத்து சிஸ்வா மிஷன் நடத்தும் புதிய தரிசன முகாமில் கலந்து கொள்ளுகிறாராம். பத்திரிகையில் அது குறித்த அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்தது; காரணம்,மதுரை சம்பவம் திரைப்பட டைரக்டரின் பெயருக்கு முன்னால் "Rev."என்று இருந்தது. இது குறித்து விசாரிக்க Siswa அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பொறுப்பற்ற பதிலே கிடைத்தது.

அவர்கள் எடிட்டர் என்று கொடுத்த மற்றொரு எண்ணில் ப்ரிண்டர் பேசினார்;அவர் நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் வேறு ஏதேதோ நியாயங்களைச் சொல்லி தன் எஜமானரின் செயலை நியாயப்படுத்தினார்.எஜமானர் என்று நான் குறிப்பிடுவது ஆண்டவரை அல்ல, மனிதனை, அந்த மனிதர் பிஸப்பு ப்ரகாஸு..!

இந்த தரிசன முகாமில் இவரோடு மைனா திரைப்பட டைரக்டர் பிரபு சாலமனும் கலந்துகொள்ளுகிறார்.அவர் ஏற்கனவே தனது சினிமா வெற்றிக்காக ஆண்டவரை (???) மகிமைப்படுத்தினவர் (???) என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவம் எங்கே போகிறது..?

இவர்களெல்லாம் கோடம்பாக்கத்தில் சினிமா துறையிலிருந்து கொண்டே ஆண்டவரை மகிமைப்படுத்துகிறார்களாம். அவர்கள் மகிமைப்படுத்தும் இலட்சணத்தை பின்வரும் தொடுப்பில் சென்று பார்க்கவும்.

http://www.google.co.in/search?q=madurai+sambavam&hl=en&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=i-TVTsCkBMvjrAedzbWhDg&ved=0CC4QsAQ&biw=1024&bih=584

இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்த படங்களையெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள் என்று நம்மையே மடக்கினார், பிரிண்டர் ஜோசப் ராஜா.

இதுகுறித்து விவரம் வேண்டுவோர் பின்வரும் தொடுப்பைத்  தொடரவும்...

http://siswamission.com/index.php?option=com_smartformer&Itemid=138

No New Posts   ”கும்கி” திரைப்படம் வெளியாகிவிட்டது..!!!

December 27, 2012

kumki-poster.jpg

மும்மூர்த்தி (தீர்க்கதரிசி) களான மோன்ஸி / ஸ்ஸ்ஸ் / விஸ்க் ஆகியோருடைய பேராதரவுடனும் ஆசியுடனும் ”கும்கி” எனும் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. மீடியா மிருகங்களின் அதிசய தேவனான இயேசு என்பவருடைய ஆசியுடன் வெளியாகி சக்கைப்போடுபோட்ட மைனா படத்தின் இயக்குநரும் மீடியா மிருகங்களின் ஆதரவாளருமான பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மாத்திரமல்லாது கிறிஸ்தவ மக்களின் ஆவலையும் தூண்டியிருக்கிறது. மைனா படத்தை ஓடவைத்த இயேசு கும்கி படத்தையும் ஓடவைப்பாரா அல்லது அதை தியேட்டரைவிட்டே துரத்துவாரா என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர். ஏனெனில் கும்கி படத்தின் வெற்றியிலேயே மீடியா மிருகங்களின் மானமும் அடங்கியிருக்கிறது. சினிமா இயக்குநர்களுக்காக ஜெபித்து திரைப்படங்கள் வெற்றியடைய வரம் தரும் மும்மூர்த்திகளான மீடியா மிருகங்கள் இந்த படமும் வெற்றியடைந்தால் அதனை ஏஞ்சல் டிவியில் போட்டு மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதன்பிறகு தங்கள் அற்புத சக்தியினால் அனைத்து சினிமாக்காரர்களுக்கும் ஆசிவழங்கி தொழில் வளரவும் கலைத்துறையின் வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் ஊழியத்துக்காக ஈர்த்துக்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம். இந்த திரைப்படத்துக்கு  மற்றொரு புகழ்பெற்ற கிறிஸ்தவ நபரான இமான் என்பவர் இசையமைத்திருக்கிறார். அவருடைய முழுபெயர் இம்மானுவேல் என்பதாக இருந்தாலும் அவர் தேவனோடு இல்லாததால் இமான் என்று அழைக்கப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

கும்கி  படத்தின் விமர்சனம் இங்கே...


பின்குறிப்பு: இந்த மீடியா மிருகங்கள் ஆசிவழங்க பயன்படுத்திவரும் இயேசு எனும் நாமத்துக்கும் நாசரேத்தூர் தச்சனுடைய குமாரனான இயேசுகிறிஸ்து என்பவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



-- Edited by chillsam on Thursday 27th of December 2012 04:55:05 PM

No New Posts   ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09

December 5, 2010

எச்சரிக்கை: இது ஒரு மீள்பதிவு; தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதியப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த கட்டுரையை மீண்டும் பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்; காலம் போனாலும் எதையும் திருத்த வேண்டாத அளவுக்கு - அதாவது நான் எழுதிய எதையும் திருத்த வேண்டாத அளவுக்கு எல்லாம் இருப்பது ஆச்சர்யமே..!

27-01-2009 05:04:51

அண்மையில் சென்னையில் (தானா எல்லா அநியாயமும்..?) பிரபல ஆராதனை வீரரின்(???) ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09< நடைபெற்றது;


பிரச்சினையில்லை;நல்ல கலெக்ஷந்தான்..! பட் கனெக்ஷன்..?யாருடன்..?

மனதைக் கெடுத்த விஷயம் என்னவென்றால் "அக்கினி,அக்கினி" என்றதும் ஆணும் பெண்ணுமாக தரையில் விழுகிறார்கள்;உச்சக்கட்ட இசை (உணர்ச்சி)வயப்பட்டு அவர்கள் விழுந்தாலும் இசை மட்டும் நிற்கவில்லை; அவ்வ‌ளவு பேரும் இளைஞர்கள் மற்றும் வாலிபப் பெண்கள்..!

எங்கிருந்தது வந்தது இந்த கலாச்சாரம்?
இதையா எழுப்புதல் என்கிறார்கள்?
எதிலிருந்து எழுப்புதல்?
எதற்காக?
வேதம் இதை அனுமதிக்கிறதா?


அருவருப்பான ஆடை வடிவமைப்புடன் அந்த "ஆராதனை வீரர்" ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்; "பயங்கரமாக" டான்ஸ் ஆடுகிறார்;

இவர்கள் யாரைத் துதிக்கிறார்க‌ள்?

இத்தனையும் "இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நம்மையெல்லாம் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும்" பிரபல கிறிஸ்தவ சானலில்தான்..!


இதைப் பார்க்கும் மாற்று மதத்தவர் என்ன நினைப்பார்கள்?

எல்லாவற்றுக்கும் மேலான உச்சக்கட்ட மோசடி...
இதை "days of prophecy" என்ற பேனரில் நடத்துகிறார்கள்;


prophecy என்றால் எது?
அதை எப்படி, யாருக்கு, எங்கே சொல்லவேண்டும்?


"prophecy" என்பதற்கு "ஞானமாய் உபதேசிப்பது" என்றொரு பொருளை சமீபத்தில் அறிந்துகொண்டேன்.(Proverbs.30:1)

யோவேல்.2:28 ஐயும் அப்போஸ்தலர்.2:17 ஐயும் இவர்கள் ஆதாரமாகக் காட்டினாலும் இதுவா "அவர்களால்" முன்னுரைக்கப்பட்டது?

தேவக் காரியங்களில் துணிகர‌ங்கொண்டு செயல்படும் சிலரால் ஆண்டவரிடம் வரவேண்டிய ஒரு கூட்டம் ஜனம் வஞ்சிக்கப்படுவது போலிருக்கிறது;

"ஆராதனை" திறந்தவெளியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்தபோது தேவமனுஷனான மோசே சீனாய் மலையுச்சியில் இருந்தான்;
அழைக்கப்பட்ட ஆசாரியனோ "ஆட்டத்தில் கலந்திருந்தான்..."


இன்றைக்கும் அதே கதைதான்..சபை மேய்ப்பர்களின் முழு ஒத்துழைப்புடந்தான் இது நடக்கிறது;

ஆனால் சடுதியில் பிரதான மேய்ப்பரும் சாவாமையுள்ள ஆசாரியருமான இயேசு(வானவர்) வெளிப்படப் போகிறார்;அப்போது "வெந்தது எவ்வளவு, வேகாதது எவ்வள‌வு " என்பது நிச்சயம் தெரிந்துவிடும்;காரணம் இந்தமுறை இறங்கப் போவது உண்மையான அக்கினி..!

"Worship" என்ற வார்த்தையின் புனிதமான பொருள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது;அது ஆலயத்தில் எல்லாவித பயபக்தியுடன் நடைபெற வேண்டும்;

திர‌ள்கூட்ட "ஆராதனை " வீர‌ர்கள் விளம்பர‌ங்கள் செய்து- திற‌ந்த‌வெளியில் ஆட்ட‌ம் பாட்டம் கொண்டாட்ட‌ம் ந‌ட‌த்தி "வியாபார‌ம்" செய்ய‌ட்டும்;ஆனால் அதை "ஆராதனை" என்றோ "தீர்க்க‌த‌ரிச‌ன‌ பெருவிழா" என்றோ சொல்ல‌வேண்டாமே...!


நீ சீயோன் குமாரத்தியா,பாபிலோன் குமாரத்தியா..?
எனும் தலைப்பில் ஒரு செய்தியினை பதிப்பதாக ஏற்கனவே சொல்லியும் செய்வதற்கு அவகாசம் இல்லை;ஆனாலும் இப்போது சொல்கிறேன்,உங்கள் பதில்தான் எனது பதிவுக்கு ஆதாரம்.,


மனித பார்வையில் வெவ்வேறு கருத்துக்கள் வரலாம்;ஆனால் தேவ ஆவியானவர் அல்லது தேவ ஆவியினைப் பெற்றவர்கள் ஒன்று போலவே சிந்திக்கிறார்கள்;
ஒரு மனுஷனைப் பார்த்தவுடனே உங்க‌ளுக்குள் இருக்கும் தூயாவிய‌ர் உங்க‌ளை எச்ச‌ரிப்பார் அல்ல‌து ஆமோதிப்பார்;ஒருவ‌னும் உங்க‌ளுக்குப் போதிக்க‌வேண்டுவ‌தில்லை(1.யோவான்.2:25 ‍-27)



பிர‌ச்சினை 1:-

த‌குதியான‌ ஆடையினைப் பற்றி வேத‌ம் ஒன்றும் சொல்ல‌வில்லையா..?
அதில் த‌வ‌று இருக்கிற‌தா அல்ல‌து இல்லையா என்ப‌தை தீர்மானிக்க‌ நாம் நிய‌மிக்க‌ப்ப‌ட‌வில்லை;வேதத்தின் வெளிச்ச‌த்தில்தான் ச‌ரி பார்க்கிறோம்; வேத‌ம் த‌ற்கால‌த்துக்கு உத‌வாது,யார் தான் ஒழுங்கு,நியாய‌ந்தீர்க்க‌ நீ யார் என்பதெல்லாம் "பாபிலோன் புத்திர‌ரின்" வ‌ழ‌க்க‌மான‌ வெற்று வாத‌ம்..!


பிர‌ச்சினை 2:‍-

அங்கே கிடைக்கும் "ப்ரீட‌ம்" எவ்வ‌ள‌வு நேர‌த்துக்கு என்ப‌து தான் கேள்வி,இதே ம‌ன‌க்க‌ட்டுக‌ள் அக‌லவே "டிஸ்கொதெ க்ள‌ப்" செல்கிறார்க‌ள்;அங்கே பாதுகாப்பு குறைவு; கெடுபிடியும் செல‌வும் அதிக‌ம்;அதே திருப்தி குறைந்த‌ செல‌வில் கிடைப்ப‌தால் தான் இங்கே வருகிறார்க‌ள்.


பிர‌ச்சினை 3:-

அங்கே கூடிவ‌ரும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளில் பெரும்பாலோருட‌ன் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பேசியுள்ள‌தாலும் இன்றைய‌ ச‌முதாய‌த்தின் பொதுவான‌ பிர‌ச்சினைக‌ளை அறிந்து வைத்திருப்பதாலும் ம‌னோத‌த்துவ‌ ரீதியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொருவ‌ரையும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பாதிக்கும்,தொடும்,அழ‌ச் செய்யும்;அது தீர்க்க‌த‌ரிச‌ன‌ம‌ல்ல‌;

க‌ண்ணீருக்கு தேவ‌ப்பிர‌ஸ‌ன்ன‌ம் மாத்திர‌ம் காரணமல்ல;அதில் சிலர் காதல் தோல்வியால் அழுகிறார்கள்;கற்பை பறிகொடுத்தோரும் அழுகிறார்கள்;கடன் பிரச்சினையினால் தற்கொலை செய்யப் போனவர்களும் அழுகிறார்கள்;

யாரும் ஆத்தும பாரத்தினாலோ,ஆண்டவருடைய வருகைக்காகவோ அழவில்லை;இவையிரண்டும் தரும் மன அழுத்தத்தைத் தீர்க்கும் இடம் இதுவல்ல;"பிரதான கட்டளையில்" இது இடம் பெறவில்லை;

நான் சொல்வது என்னவென்றால் இசையில் ''ஃப்யூஷ‌ன்'' என்றும் ''மிக்ஸிங்'' என்றும் சொல்கிறார்களே, அதை தேவக்காரியத்தில் முயற்சிக்கக்கூடாது;
மக்கள் விடுதலை பெற்றால் அது தேவ இரக்கம்,அவருடைய சுத்தக் கிருபை;
நிச்சயம் இவர்களுடைய இசையினால் அல்ல‌;


பிரச்சினை 4:-

மிரியாம் ஆடிய‌து இன்றைய‌ சினிமா ந‌ட‌ன‌ம‌ல்ல‌;தாவீது ஆடிய‌து ஆல‌ய‌த்திலோ தேவ‌ப் பிர‌ஸ‌ன்ன‌த்திலோ அல்ல‌.

இவ்வுல‌க‌த்தின் வேஷ‌ம் வேண்டாமென்றுதான் "ஆட்டுத் தோலைப்" போர்த்துக் கொண்டு ம‌லைக‌ளிலும் குகைக‌ளிலும் சித‌றுண்டு அலைந்தார்க‌ள்;(வாசிக்க எபிரெயர்.11)இவ‌ர்க‌ளும் "ஆட்டுத் தோலைத்" தான் போர்த்துக் கொண்டு வ‌ருகிறார்க‌ள்;ஆனால் உள்ள‌த்திலோ..?


என‌து விம‌ர்ச‌ன‌ம் த‌வ‌றான‌தென்றால் வேத‌ம் த‌வ‌றானதாக‌ இருக்கும் அல்ல‌து இன்னும் நான் வேதத்தை சரியாக அறியாத‌வ‌னாக‌ இருப்பேன்;
நான் தோற்றாலும் வேத‌ம் தோற்க‌க்கூடாது..!

இதை அறிந்து கொள்ள‌வே "ஓட்டு" கேட்டுள்ளேன்;இந்த‌ ஓட்டு போட‌க் கூட‌வா "அதைத்" த‌ர‌வேண்டும்..?!


எனது இந்த பதி (ல்)வு நண்பர் ஜோ அவர்களுக்கு முன்பதாக வந்திருக்கவேண்டும்.(29/01//2009 அதிகாலை 2:30 மணிக்கு) ஆனாலும் "Band width exeeded" என தடைப்பட்டு விட்டது; எனவே பொருந்தா கருத்துக்களைப் பொருத்துக் கொள்ளவும்... இதோ ந‌ண்பர் SundarP அவ‌ர்க‌ளை நோக்கி...

நான் ரசிக மன்றம் ஆரம்பிக்கப் போவதில்லை;இங்கே ஒவ்வொருவரும் என்னை ஆதரித்தோர் எதிர்த்தும் எதிர்த்தோர் ஆதரித்தும் எழுதியதுண்டு;அதற்காகவே நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்;

நாமெல்லோரும் ஒரு நாள் சந்திக்கப் போவதையும் எனது ஆவியில் உணர்கிறேன்;நமது தளம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்;அதையும் நமது தொலைக்காட்சிகளில் காண்போம்;இதுதான் ஆரோக்ய‌மான‌ ந‌ட்புண‌ர்வு;

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ப‌து தானே இந்திய‌னின் அழ‌கு..!
"Argument wins the situation but loses the person" -William words worth. So never argue with others.
-இது இன்று என‌து ந‌ண்பன் அனுப்பி நான் ரசித்த SMS


எனவே நாம் நமக்காக எதையும் பேசாமல் நம்மை க‌வ‌னிக்கிற‌வ‌ருக்காக‌வே (நேயரும் ஆயரும்...!) செய்வோம்; "அவ‌ரே" அனைத்தையும் முடிவு செய்வார்;ந‌ம‌க்கு வெற்றியும் தோல்வியும் இல்லை;

தொலைக்காட்சி பேட்டியில் இரு த‌ர‌ப்பு வீராவேச‌மாக‌ மோதிக்கொள்வ‌ர்; முடிவில் அதை ஒருங்கிணைத்து ந‌ட‌த்துப‌வ‌ர் எந்த‌ முடிவையும் எடுக்காமாலே "நேரம்" க‌ருதி முடித்துவைப்பார்;இதில் யாருக்கு லாப‌ம்?அதை க‌வ‌னித்த‌வ‌ருக்கே..அவ‌ருடைய‌ க‌ருத்தில் தெளிவும் ''இன்னார் இப்ப‌டியா'' என்ற‌ தெளிவும் பிற‌க்கும்;

அதுபோல‌வே நாம் யாருக்காக‌வோ (ஞானத்தெளிவுக்காக‌..) ப்ர‌யாச‌ப்ப‌டுகிறோம்;என‌வே வ‌ருத்த‌ம் கொள்ள‌வேண்டாம்;நானும் கூட‌ யாராவ‌து ப‌தில‌ளித்திருந்தால் ப‌ய‌த்துட‌னே ப‌டிக்க‌த் துவ‌ங்குகிறேன்;

என‌து மிக‌ மிக‌ தாழ்மையான வேண்டுகோள்..,
வேத‌ வார்த்தைக‌ளின் இட‌ம் பொருள் ஏவ‌ல் (context) அறிந்து ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து மாத்திர‌மே அது சொல்ல‌ப்ப‌ட்ட‌ நோக்க‌த்தை நிறைவேற்றும்;


ந‌ம‌து பெந்தெகொஸ்தே பாஸ்ட‌ர்க‌ளைப் போல‌ ஒரு பொருளை விள‌க்க‌ ஆண்ட‌வர் சொன்னதொரு உவ‌மைக்கு "புது ரூட்" போட‌க்கூடாது;


உதார‌ண‌மாக‌ "ந‌ல்ல‌ சமாரிய‌ன்" உவ‌மை;அத‌ன் பொருளும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ கார‌ண‌மும் ஆண்ட‌வ‌ராலேயே விள‌க்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து;ஆனால் சத்திரக்காரன் யார்? திருடன் யார்? அடிபட்டவன் யார்? என ஆராய்ந்து "ஞான அர்த்தம்" தேடிப் பிடித்து போதிப்பார்க‌ள்;

இதையாவ‌து ''ப‌க்திவிருத்தியானால் ச‌ரி'' என‌ விட்டுவிட‌லாம்;ஆனால் சம்பந்தா ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் வ‌ச‌ன‌ங்க‌ளை எடுத்து வீசுவ‌து க‌ல்லெறிவ‌து போலாகும்;நானாகிலும் இருபுற‌மும் க‌ருக்கான‌தை கையில் வைத்துப் போராடுகிறேன்;நிச்ச‌ய‌ம் காய‌ம் ஏற்ப‌டும்;ஆம்,அந்த‌ கால‌த்தில் ப‌ட்ட‌ய‌த்துக்கு கைப்பிடி கிடையாதாம்;

அப்ப‌டியானால் "மார்ட்டீன் லூத‌ர்" முதலாக சீர்திருத்தவாதிகள் எல்லோருமே த‌வ‌றான‌வ‌ர்க‌ளா?
அவ‌ர்க‌ள் கால‌ம் முடிந்திருக்க‌லாம்;அவ‌ர்க‌ள‌து யுக‌ம் இன்னும் முடிய‌வில்லை;அவ‌ர்க‌ள் மாம்ச‌த்திலில்லா விட்டாலும் எம‌து சிந்தையில் க‌ருத்தாக்க‌ம் உண்டாக்கி வாழுகிறார்க‌ள்;

அவ‌ர்கள்தான் ப‌ரிசுத்த‌ வேதாகம‌த்தை சிறை மீட்ட‌வ‌ர்க‌ள்;ந‌ம‌து தாய்மொழியில் {மொழிக‌ற்று} மொழிபெய‌ர்த்துத் த‌ந்த‌வ‌ர்க‌ள்;(என‌வே தான் நாம் இத்த‌னைப் பிரிவாக‌ப் பிரிந்தோம் என்ப‌து த‌னி க‌தை..!)அதை வைத்து தான் நாம் ச‌ண்டையிடுகிறோம்;

சீர்திருத்த‌வாதிக்கும் குற்ற‌ஞ்சாட்டுகிற‌வ‌னுக்கும் வித்தியாச‌மில்லையா?


ம‌ந்தை பெருகினால் ஆடுகளில் ஒழுங்கீன‌மும் மேய்ப்ப‌னில் சோம்ப‌லும் சோர‌ம் போத‌லும் இய‌ல்பு;என‌வே தான் பிர‌தான‌ மேய்ப்ப‌னைப் ப‌ற்றிய‌ அச்ச‌த்தினை க‌ண்காணியான‌வ‌ன் உடைய‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும் என‌வும் அதை அருகிலிருந்து க‌வ‌னிப்ப‌வன் அவனை எச்ச‌ரிக்க‌வேண்டுமென‌வும் வேத‌ம் சொல்லுகிற‌து.(அப்போஸ்த‌ல‌ர்.20 ம‌ற்றும் 1.பேதுரு.3)
எசேக்கியேல் 34 வேற்று கிர‌க‌ வாசிக்கா எழுத‌ப்ப‌ட்ட‌து?


என‌வே தாங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கும் என‌து க‌ருத்துக்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என‌ அறிய‌ வேண்டுகிறேன்;என‌து எழுத்து ச‌ற்று தீவிர‌மாக‌ தோன்றினாலும் அது வைராக்கிய‌த்தினாலும் உள‌க் கொதிப்பினாலும் வெளிப்ப‌ட்ட‌தேய‌ன்றி வெறியினாலும் பொறாமையினாலும் வெளிப்ப‌ட்ட‌த‌ன்று.

vincentmca:
// சகோதரர் சில்சாம் சொல்வதில் சில என்னை பொறுத்தவரை சரியானதாக இல்லை. தங்களது பதிப்பை படிக்கும் போது வந்தவர்கள் அணைவரும் உண்மையாக ஆராதிக்க வரவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. //

நான் சொல்வது எல்லாம் சரியானதாக எனக்கே தோன்றுகிறதில்லை;ஆனால் வேதம் சரியானதாகவே இருக்கிறது;

நான் இசைக் கலைஞ‌ன்;ரசிகன்;நானும் அவர்களுடைய பாடல்களில் சிலதை உணர்ந்து பாடி (ஆனந்த‌)கண்ணீரோடு ஆண்டவரை ஆராதித்துக் கொண்டிருக்கிறேன்;எனவே தான் மக்கள் ரசனைக்கேற்ப "ஃப்யூஷன்" பண்ணவேண்டாமென்கிறேன்;அதனால்தான் "கன்ஃப்யூஷன்" ஆகிறது;


எனது "எங்கே கிறிஸ்தவ தமிழிசை" எனும் பதிவை கவனிக்க வேண்டுகிறேன்.

அங்கே ஆராதிக்க வருகிறவர்களைக் குறித்து நான் எதையும் சொல்லவில்லை;அவர்கள் ஆவலுடன் தான் வ‌ருகிறார்க‌ள்;ஆனால் உண‌ர்வைத்தூண்டுவ‌தில் வெற்றி பெறும் த‌லைவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை
"ஆண்ட‌ருடைய‌ அடிச்சுவ‌டுக‌ளின் வ‌ழியில்" ந‌ட‌த்தாம‌ல்(சங்கீதம்.85:13) த‌ங்க‌ளை முன்னிலைப்ப‌டுத்துவ‌தால் ஒருக‌ட்ட‌த்தில் அந்த‌ த‌லைவ‌ர்க‌ள் ம‌க்க‌ளின் ர‌ச‌னைக்கேற்ப‌ செய‌ல்ப‌ட்டு தேவ‌ன‌ற்ற‌ மாய‌மான ஆராதனை வீர‌ர்க‌ளாகிறார்க‌ள்;


ஆவியான‌வ‌ர் சொல்வ‌தையோ வேத‌ம் சொல்வ‌தையோ அவ‌ர்க‌ள்(த‌லைவ‌ர்க‌ள்) செய‌ல் ப‌டுத்தும் நாளில் அவ‌ர்க‌ள் செல்வாக்கு இழ‌ந்து புக‌ழ் ம‌ங்கும்;அத‌ற்குள் "ச‌ம்பாதித்துவிட்டால்" ப்ர‌ச்சினையில்லை;"செட்டில்" ஆகிவிட‌லாம்;இதை ச‌மாளிக்க‌வே "வாரிசுக‌ளை" முன்னிலைப்ப‌டுத்துவார்க‌ள்;அவ‌ர் வ‌ந்து "புதுமையாக‌" எதையாவ‌து செய்வார்;இது உண்மையான‌ சீஷ‌த்துவ‌ம் அல்ல‌.

SundarP Wrote :
// கடைசி கால சபையை சீர்திருத்தும் ஒரு பிரதான மேய்ப்பனாக உங்களை தேவன் தேர்ந்தெடுத்திருந்தால்...//

கர்த்தர் ஒருவரே பிரதான மேய்ப்பர்..! (1.பேதுரு.5:4)
அவர் ஒருவரே நல்ல மேய்ப்பர்..! (யோவான்.10:11)
எல்லோருக்கும் பெரிய மேய்ப்பரும் அவரே..! (எபிரெயர்.13:20)

No New Posts   வேத விற்பன்னரா,விகற்பன்னரா...?

June 8, 2012

இன்று மாலையில் சென்னையில் வைத்து சுவிசேஷகர் ஆல்பர்ட் சாலமோனுடைய ஊழியத்தின் 25 வது வருட வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. மீடியா பார்ட்னரான ஏஞ்சல் டிவி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தது.

மைதானத்தில் பெரிதாக கூட்டம் இல்லாவிட்டாலும் மீடியா அமளிதுமளிபட்டது. இதுபோன்ற விழாக்கள் தேவைதானா என்ற கேள்வி ஒருபுறம் எழும்பினாலும் அதையும் கூட இவர்கள் தேவனுக்கேற்ற ஒழுங்கில் நடத்தினார்களா என்பதே கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

விசுவாசிகள் பொதுவாக தலைவர்களுக்குக் கீழ்ப்ட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எழும்பி தலைவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டிக்கமுடியாது.கண்டிக்கக்கூடிய தலைவர்களை இந்த மீடியா மிருகங்கள் அருகில் வைத்துக்கொள்ளுவதில்லை. எல்லாம் ரெகோபெயாம் ஆட்சிகாலம் போலவே இருக்கிறது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராஜன் ஜாண் செய்த கோமாளித்தனங்களே இத்தனை வருத்தத்துக்கும் காரணமாக இருக்கிறது. விழா நாயகரான ஆல்பர்ட்டின் வழுக்கைத் த்லையை கிண்டலடிப்பதும் தனிநபர் புகழ்ச்சியுமாக அவருடைய நாக்கு அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது அவர் அடித்த ஒரு காமெண்டில் விளங்கியது.

எப்படியெனில் ஆல்பர்ட்டை ஆசீர்வதித்து ஜெபிக்க சிறப்பு அழைப்பாளர்களாக வந்து அமர்ந்திருந்த மூத்த ஊழியர்களை மேடைக்கு அழைக்கிறார்,ராஜன் ஜாண். ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு காமெண்ட் பண்ணியவர் அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சி மேடைக்கு வாங்க என்று அலப்பியவர் மேடையில் வைத்து அவரை அறிமுகப்படுத்தி ஜெபிக்க சொல்லும் முன்பதாக, ”அண்ணாச்சி குறுகிய காலத்தில் வேத விகற்பன்னராக விளங்குகிறார் ”, என்று உளறினார்.

 

இதை யார் கவனித்தார்களோ அல்லவோ இதில் ஒரு ஊழியனுடைய ஆவியை நிதானிக்கமுடிகிறது. அண்ணாச்சி போன்ற்வர்களும் இதுபோன்ற புகழ்ச்சியையே விரும்புகிறார்கள்.இதையெல்லாம் பார்த்து ஆண்டவர் என்ன நினைப்பார் என்ற அச்சமோ மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கமோ யாருக்கும் இல்லை.

”அண்ணாச்சி குறுகிய காலத்தில் வேத விகற்பன்னராக விளங்குகிறார் ”, என்ற வார்த்தையில் என்ன தவறு என்று சிலர் யோசிக்கலாம். விற்பன்னராக என்று சொல்லவேண்டியதையே விகற்பன்னராக என்று ராஜன் ஜாண் சொல்லியிருக்கிறார். வாயில் ஏழெட்டு தவளைகளை வைத்திருப்பதைப் போன்ற ஒரு உச்சரிப்பு.இதையே தனது பாணியாக வைத்துக்கொண்டார், போகட்டும். அவரது ஆவியானது ஆவியான்வருடைய கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதுபோன்ற குழப்பங்களும் மனித புகழ்ச்சியையும் அரங்கேற்றும் தரகர் வேலையைப் பார்க்கமாட்டார் என்று நம்புகிறோம்.

196060_230166817100630_39351226_n.jpg

தேசம் அழிகிறது,அழியப்போகிறது என்று ஒருபக்கம் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்,இன்னொரு புறம் இதுபோல வேண்டாத விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். இவர்களுடைய லாஜிக் புரியவில்லை.இங்கு கூடியிருந்த சில ஆயிரம் மக்களுக்காக நகரமெங்கும் எத்தனை ஆயிரம் போஸ்டர்கள் வினைல் ஹோர்டிங்ஸ் ...எல்லாம் யாருடைய பணம் ... ? யாருக்கு புகழ் சேர்க்க ? யாருடைய மார்க்கெட்டை லிஃப்ட் பண்ண ? சபையார் இதனைத் தீவிரமாக யோசிக்கவேண்டும்.

551229_230166367100675_525274028_n.jpg

இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சோகராகம் பாடும் முன்னாள் அப்போஸ்தலர் பால் தங்கையா வருகை புரிந்திருக்கிறார். அவர் தற்போது தனது சொட்டைத் தலைக்கு விக்கெல்லாம் போட்டு ப்ளே பாய் போல புது தோற்றம் காட்டுவதாலேயே முன்னாள் அப்போஸ்தலர் என்கிறோம்.மேலும் அவருடைய மனைவி ஓடிப்போனவுடனே அவர் ஊழியத்தைவிட்டு விலகியிருக்கவேண்டும்.ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாது புது மலர்ச்சியுடனும் மறுமலர்ச்சியுடனும் வாழ்க்கையைத் தொடருவதாகக் கேள்வி.

இவர்களெல்லாரும் சேர்ந்து எதை எழுப்புவதற்காக எழுப்புதல் பெருவிழா கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை .

 revival%20festival%2012.jpg

No New Posts   அம்பேத்கரும் இயேசுவும்..!

April 13, 2012

இன்று சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 122-வது பிறந்தநாளாம். அரசாங்கம் அதனைக் கொண்டாடுகிறதோ இல்லையோ பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் தன்னார்வத்துடன் அதனை பேனர் அமைத்து கொண்டாடுகிறார்கள். யாரும் அவர்களுக்கு கட்டளையிடவுமில்லை. யாரும் அவர்களைத் தடுக்கவும் முடியாது. வடதேசத்தில் எங்கோ பிறந்த அவரை தமிழ் சமுதாயம் தூக்கிவைத்து கொண்டாட ஒரே காரணம் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் என்பதே.

அம்பேத்கர்

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=75255a51-0d37-4c02-8595-358b3a111236&CATEGORYNAME=TNATL


அதேபோல யார் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடுகிறார்களோ அவர்களைக் கொண்டாட நம்முடைய மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனாலும் இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சுயநலத்துடன் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள சில பொய்யர்களும் புல்லர்களும் கூட எழும்பியிருக்கிறார்கள்.

அம்பேத்கர் எப்படி யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டாடக்கூடிய பொதுவான தலைவராக இருக்கிறாரோ அதே போல இயேசு பெருமானையும் அவரவர் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரோ அவருடைய குடும்பத்தாரோ யாரையும் தடுக்காதது போலவே இயேசுவானவரும் தம்மைக் கொண்டாடுவோர் யாரையும் தடுக்கிறதில்லை.

இதே போல சென்னையில் வைத்து ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவில் இயேசுவின் பெயரால் ஒரு கூத்து நடக்கிறது. அவர்கள் யாரிடமும் கட்டளை பெறவுமில்லை, கட்டளையிடப்படவுமில்லை. ஆனாலும் முழுமையான அதிகாரம் பெற்றவர்களைப் போல இயேசுவின் பெயரால் எதையோ செய்து ’இதுவே கிறிஸ்தவம்’ என்பது போன்ற மாயைதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கிறிஸ்துவின் சுபாவம் எதுவும் இல்லை என்பது மற்ற ஊழியர்களின் அனுபவமாகும். பால் தினக்ரன் போன்ற பிரபல ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத காரியங்களையும் கிறிஸ்தவ ஊழியர்கள் என்ற போர்வையில் இதுபோன்ற சுயாதீன ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் நம்முடைய ஆண்டவருடைய பெயரைச் சொல்லி பிழைப்பதால் இவர்களும் நம்மில் ஒருவர் போல கருதப்படுகிறார்கள். எனவே இவர்களுக்காக நாம் பாரத்துடன் ஜெபிக்கவேண்டும்.

நமக்கு என்ன தேவை, திரள்கூட்ட மக்கள் சத்தியத்தை கேட்கவேண்டும், இரட்சிப்படையவேண்டும் என்பது தானே, அப்படியானால் இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது என்றும் சிலர் சொல்லலாம். ஆனால் பிரச்சினை அதுவல்ல, தவறான முறையில் சத்தியத்தைக் கேட்பதைவிட அதை அவர்கள் கேட்காமலே இருக்கலாம் என்பதே நம்முடைய அபிப்ராயம்.

இதோ அண்மையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பு.

இதில் கிறிஸ்தவத்துக்கும் பைபிள் போதிக்கும் அடிப்படை சத்தியத்துக்கும் அப்பாற்பட்ட விதத்தில் நடைபெறும் காரியங்கள் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதில் ஒரு பாடல் பின்னணியில் ஒலிக்க கூடியிருக்கும் ஜனங்கள் குதித்து கூத்தாடும் காட்சிகள் இடம்பெறுகிறது. இவர்களை ஆட்டிவைக்கும் ஆவி எது, பிசாசின் ஆவியா, கர்த்தருடைய ஆவியா எனும் குழப்பம்... மேடைக்கு அழைக்கப்படும் சில சகோதரிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளப்படுகிறார்கள். காட்டுக் கத்தல் கத்தி பிசாசை விரட்டுகிறார், காரியத்தை முன்னின்று நடத்தும் திரு.மோகன் தாஸ். அவருக்கு உதவியாக அருகில் நிற்கும் இன்னொருவர் பரியாசத்துடன் சிரித்துக்கொண்டே ஒரு சகோதரியின் கழுத்தைப் பிடித்து முன்னும் பின்னும் தள்ளுவதைப் பார்க்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் வேடிக்கையான நிகழ்ச்சி போலும். ஏழை எளிய மக்களுக்கோ விடுதலையே நோக்கம்.தொடர்ந்து திரு.மோகன் தாஸ் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் செய்தி (?) இன்னும் கொடுமை. ஒரு வசனத்தையெடுத்து அதை வியாக்கியானம் செய்து கிறிஸ்துவானவரை மக்களுக்குக் கொடுக்காமல் தங்களையே விற்கிறார்கள். இடையிடையே தவளைக்கொப்பான சத்தம் வேறு..! இந்த காரியங்களைப் பார்க்கும்போது ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது...

  • சங்கீதம் 14:4 அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

இதுபோன்ற ஊழியங்களை பரிசுத்தாவியானவருடைய தெளிவான நடத்துத்தலின்படி முழுவதுமாக நிராகரிக்கிறோம். இவை முழுவதுமே பேகனிக் மெத்தட் ஆஃப் மினிஸ்டிரி அல்லது வொர்ஷிப் (Paganic method of ministry or worship) எனலாம். (பழங்குடி இனத்தவரின் ஆராதனை முறை...) அதாவது நம்முடைய இந்து பாரம்பரியத்தில் பெரிய தெய்வங்கள் சிறிய தெய்வங்கள் என்று இரு வகை உண்டு. உதாரணம் திருப்பதியும் மேல்மருத்துவத்தூரும். பெரிய தெய்வ வழிபாடு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெறும். சிறிய தெய்வ வழிபாடோ கடா வெட்டுவதில் துவங்கி போதை(பே)யாட்டத்துடனும் கூத்துடனும் முழுக்க முழுக்க வெறித்தனமாகவும் ஆக்ரோஷத்துடனும் பார்ப்போரை அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும்.

ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்ற பெயரில் பக்கவழியாகப் புறப்பட்ட இந்த கள்ள ஊழியர்களும் அவ்வாறே சர்வ வல்லவரை சிறிய தெய்வங்களில் ஒன்றைப் போலத் தாழ்த்தி அவருடைய பெயரைச் சொல்லி உணர்ச்சியைத் தூண்டுவது போன்ற ஆர்ப்பாட்ட இசை இரைச்சலுடன் கூச்சலிட்டு எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய பெண்களைக் காட்சிப் பொருளாக்கி கிறிஸ்துவின் மகிமையைக் கேலிகூத்தாக்குகிறார்கள்.

இந்த வரிசையில் ஏற்கனவே நாம் வெளிப்படுத்தியவர்கள் ஒரு சிறு உதாரணம் மாத்திரமே. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நமக்கு சமயம் வாய்க்குமானால் அதுபோன்ற நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் நேரடி நிகழ்ச்சியாகப் பதிவுசெய்து இணையத்தில் பகிரவும் ஆயத்தமாக இருக்கிறோம். இதுபோன்ற தவறான ஊழியத்துக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவையும் குவியும் பணமூட்டையையும் பேர்புக்ழையும் பார்த்து இச்சைகொண்ட சில நல்ல ஊழியர்களும் சுயலாபத்துக்காக சத்தியத்தை விற்கிறார்கள்.ஆனால் வேதம் சொல்லுவது என்ன,

  • நீதிமொழிகள் 23:23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

வேதம் சொல்லுவதை செய்வார்களா என்ன, நம்மீதே கோபங் கொள்ளுவார்கள். எப்படி அம்பேத்கரை இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லையோ அதேபோல இயேசுவையும் மாற்றிவிட்டார்கள். மேலும் சமுதாயத்தில் அங்கீகாரம் பெறவும் முன்னேறவும் பிழைப்பை நடத்தவும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக முயற்சிக்கிறான். சிலர் நடிகர்களுக்கு ரசிகர் அமைக்கிறார்கள். என்ன இலாபம் ? (அந்த காலத்தில்... ) நடிகர் தன் பெயரில் பேனர் கட்டவும் தியேட்டரில் கோஷம் போடவும் ஏதாவது பணம் கொடுப்பார். பணம் கொடுப்பவரை வள்ளல் எனப் புகழுவார்கள். பணம் கொடுக்காதவனை கஞ்ச மகா பிரபு என்று இகழுவார்கள். (உதாரணம்: எம்ஜிஆர்,ரஜினிகாந்த் ஆகியோர் வள்ளல்களாகவும் சிவாஜி, கமல் ஆகியோர் கஞ்ச மகா பிரபுக்களாகவும்... biggrin ) இன்னும் தியேட்டர்காரனை மிரட்டி ரசிகர் மன்ற கோட்டாவில் டிக்கெட் வாங்கி ப்ளாக்’கில் விற்று பணம் பார்ப்பார்கள். இன்னும் சில தியேட்டர்களில் ரசிகர் மன்றத்துக்காகவே தனி ஷோ நடக்கும்.

இப்படியே அரசியல் கட்சிகள், பல்வேறு சமுதாய இயக்கங்கள், கலை பண்பாட்டு இயக்கங்கள், மனித உரிமைகள் இயக்கங்கள் என்று இந்த குழுக்களின் எல்லை கணக்கில்லாமல் விரிந்துகொண்டே போகிறது. அவர்களுக்கு தேவை லெட்டர் பேடு, அவ்வப்போது வைக்கப்படும் பேனரில் போட்டோவுடன் பெயர். அப்படிப்பட்ட இயக்கங்களில் ஒன்றாகவே இன்றைக்கு சுயாதீன சபைகளும் பெருகியிருக்கிறது என்கிறோம். ஒருபக்கம் சபையின் எல்லைகள் விரிவடைவது குறித்து சந்தோஷப்பட்டாலும் அது ஆரோக்கியமாக இருக்கிறதா சத்தியத்தின்படி நடைபெறுகிறதா என்று யோசிக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

தங்கள் கேடுபாடான வாழ்க்கை முறையை ஒழித்துவிட்டு (பலரும் குடிகாரர்களாகவும் கஞ்சா விற்பவர்களாகவும் கொலைகாரர்களாகவும் திருடர்களாகவும் இருந்தவர்களாம்.. biggrin அதையே தங்கள் பிரபலத்துக்கான அடையாளமாகவும் எடுத்துக்கூற இவர்கள் தயங்குவதில்லை..! ஏதாவது பிரச்சினை வ்ந்தால் தங்கள் பழைய வாழ்க்கையைச் சொல்லி மிரட்டுவார்கள்..) கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்யும் தன்னார்வ ஊழியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தும் அதே நேரத்தில் தாங்கள் மேற்கொள்ளும் சத்தியத்துக்குப் புறம்பான வழிமுறைகளைக் குறித்து நீங்கள் பரிசீலித்து ஆண்டவருக்கு அஞ்சி சத்தியத்தை சத்தியமாக எடுத்துச்சொல்லி தரமுள்ள கிறிஸ்தவம் வேர்கொள்ள உதவிசெய்யவேண்டுமாய் வேண்டுகிறோம். கர்த்தர் எதை செய்தாலும் உங்கள் மூலமாகவே செய்யவேண்டும். நீங்கள் அவரிடமாகத் திரும்பி அவருடைய வழிகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீங்கள் செய்யவேண்டிய பணியை யார் செய்வார்? ஒருவேளை நீங்கள் திரும்பாமலே போனால் ஒரு கூட்டம் மக்களை கர்த்தருடைய மந்தையில் சேர்க்காமல் திருடிக்கொண்டு போன மாபாவத்துக்கு ஆளாவீர்களே... யோசிப்பீர்களா,ஐயாமாரே..???

No New Posts   இயேசு வந்திருக்கேண்டா....ஹெப்ஸி அலறல்..!

November 12, 2011

அண்மையில் அதிர்ச்சிகரமானதொரு செய்தியை காணநேர்ந்தது... அதில் ஒரு பெண்மணி, ”இயேசு வந்திருக்கிறேன்...” என்று துவங்கி தீர்க்கதரிசனம் என்ற பெயரில் எதையோ உளறியது;இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது தகுந்த பதில் கிடைக்கவில்லை, மாறாக வேறு சில சங்கடங்களை நமக்கு நேர்ந்தது, அதைக் குறித்து நாம் கவலைப்படுவதாக இல்லை; இதனை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொண்டோம், ஆச்சரியகரமான விதத்தில் இதுவே நமது கடைசி பதிவுபோலாகி நமக்கு நல்லதொரு ஓய்வை ஃபேஸ்புக் நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் நன்றி, நம்முடைய பயணம் தொடரும்..!

இதோ அதுசம்பந்தமான விவரங்கள்...

அதில் நாம் சற்று கடினமாக பின்வருமாறு நமது கருத்தை வெளியிட்டோம்...

சகோதரியே, தயவுசெய்து மொட்டையடித்து விட்டு வந்து பேசுவீர்களா...? அல்லது தலைக்கு முக்காடிட்டுக் கொள்ளுங்கள் என்று வேதம் சொல்லுகிறது.

நீஙகள் சொன்னதெல்லாம் ஏற்கனவே வேதத்தில் இருக்கிறது, எனவே அதில் ஒன்றும் தீர்க்கதரிசனம் அல்ல...”கர்த்தர் சொல்லுகிறார்” என்ற வார்த்தையை துணிகரமாகப் பயன்படுத்தியதன் பயங்கரத்தை நீங்கள் விரைவில் சந்திப்பீர்கள்...

Devamanohar Michael

இயேசு பேசுவதுபோல் பேசுகிறார் பின்னர் ஆசிர்வாத ஜெபத்திற்கு பேசுவதுபோல் இருக்கிறது பின்னர் இயேசு பேசுவதுபோல் பேசுகிறார்.

இயேசு ஒருபோதும் தன் பெயரை சொல்லி அறிமுகபடுதவில்லை. தன்னை மனுஷகுமாரன், மேசியா, தேவகுமாரன் என்றுதான் குறிப்பிடுகிறார்.

சகோதரி பேச்சில் 'இயேசு', 'கர்த்தர்' என்று குறிப்பிடுவதால் .......................... பேசுவது யார்?.

 

 

Satheesh Nadesan Nagercoil

Vethathil ulla ella theerkatharisiyum karthar namathinal than theerka tharisanam koorinarkal neengal padikkavillaiya. Vetham solkirathu mamsathil vantha yesu christhu vai arikkai pannatha entha aviyum anti christ avi. Yesu vin namathinal sollpadum theerka tharisanam athu poi illai. Athanl pesuvathu Karthar Anal unkal manathil yen payam???

Anaivaraium Kuttapadithi pesum Bro.Chill Sam Un Kannil erukkira uthirathai paramal un sakotharan kannil erukkira thurumbai parpathu enna?  Thursday at 11:32


Sakthi Nambi Rajan

‎@satheesh Nadesan : ஐயா வேதத்தை நான் சில முறைகளே முழுவதும் வாசித்திருக்கிறேன், அதனால் ஒரு சின்ன சந்தேகம் , நீங்கள் என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?

எனக்கு தெரிந்து இயேசு யார் மேலும் வருவதாக வேதம் சொல்லவில்லையே ? ஆனால் இவர்கள் " இன்றைக்கு இயேசு வந்திருக்கிறேன் " என்று சொல்கிறாரே .. இதற்கு வேத ஆதாரம் உண்டா? எங்கள் ஊரில் சாமி ஆடும் பாட்டி அடிகடி " டேய் மாரியாத்தா வந்திருக்கேன் டா " என்று சொல்வது தான் நியாபகம் வந்தது .

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா தீர்க்கதரிசியும் கர்த்தரின் நாமத்தில் தான் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் , உண்மை தான். ஆனால் கர்த்தரின் நாமத்தினால் தீர்க்க தரிசனம் சொல்லும் எல்லோரும் உண்மை தீர்க்கதரிசியா?

வேதத்தில் மீகா புத்தகத்தை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . மீகா 3 : 11 அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

எனக்கு வேதம் சொல்லி தந்தவர் , நம் சாபங்களை போக்க இயேசு ஏற்கனவே வந்துவிட்டார் என்று. " உங்கள் சாபங்களை போக்க இயேசு இப்பொழுது வந்திருக்கிறேன்" என்று சொல்வது தவறு இல்லையா?

அவர்கள் சொல்வது தவறா சரியா என்று நிதானிக்க நான் விரும்ப வில்லை . தேவன் அறிவார் .

சில்சாம் சொல்வது போல .”கர்த்தர் சொல்லுகிறார்” என்ற வார்த்தையை துணிகரமாகப் பயன் படுத்த வேண்டாமே .

Thursday at 20:39 ·

No New Posts   பிசி ஜியாஃப்ரி எனும் மோசடி ஊழியர்

October 27, 2010

கிறித்துவுக்குள் அன்பான தேவனுடைய பிள்ளைகளே,கடந்த இரண்டு வருடமாக கிறித்தவ விழிப்புணர்வுக்காக இணையதளத்தின் மூலம் போராடி வருகிறேன்.

எனது உள்ளத்திலிருக்கும் பல காரியங்களையும் மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு வெளிப்படையாகத் தெரியும் காரியங்களை மட்டுமே கண்டித்து வருகிறேன்.

இதன் காரணமாக பலராலும் பல சமயங்களில் விமர்சிக்கப்பட்டும் தனிமைபடுத்தப்பட்டும் தவித்ததுண்டு;பலரும் பலமுறை கேட்ட போதும் என்னுடைய போதனையாக எதையும் எங்கும் நிறுவியதில்லை;நான் எந்த ஒரு குறிப்பிட்ட கூட்டத்திலும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததே இதற்குக் காரணம்.

இந்நிலையில் நான் எதை எழுதினாலும் அதற்கு என்னுடைய தள நண்பர்கள் ஆதாரம் கேட்பதுண்டு; இலைமறை காய்மறையாக சினிமா கிசுகிசு பாணியில் எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை;இயேசுவானவர் தனிமையில் கண்டிக்கச் சொன்ன காரியமும் அதுவல்ல;

எதிரிகள் வெளிப்படையாகச் செய்யும் காரியங்களை அந்தரங்கமாகக் கண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை;அவர்களுடன் பணபேரத்துக்கு வேண்டுமானால் இந்த அணுகுமுறை உதவலாம்;ஆனால் எனக்கோ அதுபோன்ற எண்ணமோ என்னை பிரபலப்படுத்திக்கொள்ளும் ஆசையோ இல்லை;

எனவே பெரும்பாலான என்னுடைய நண்பர்களின் வேண்டுகோளின் காரணமாக எந்தவொரு மோசடியான ஊழிய முயற்சிக்கும் ஆதாரத்தை சேகரிக்கவும் அதுபோன்றோரை அடையாளம் காட்டவும் முயற்சிக்கிறேன்.

இதன் காரணமாக நான் வெறுத்துவிட்டு வந்த டிவி பார்க்கும் பாவத்தையும் செய்யவேண்டியதாகிறது;அதிலும் இந்த மோசடியாளர்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டியதாகிறது;கர்த்தர் தாமே என்னை மன்னிப்பாராக‌.

இங்கே முதலாவதாக,பெந்தெகொஸ்தே வட்டாரத்தில் பயிற்சி பெற்று ஆவிகளுடன் அடையாளம் காணப்பட்டு வேப்பமரத்தடி பூசாரி தரத்தில் ஊழியம் என்ற பெயரில் எதையோ செய்து வேகமாக வளர்ந்துவிட்டவர் இந்த நபர்;இவரைக் குறித்த மேல் விவரங்களை அறிந்தோர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.



மேற்காணும் இந்த துண்டு படத்தைக் குறித்த கருத்துக்களையும் இந்த ஊழிய முறையின் சூழ்ச்சிகளையும் சூட்சமங்களையும் சத்திய விரோதப் போக்கினையும் விரைவில் வெளிக்கொணருவேன்.

No New Posts   மோகன் சி லாசரஸ் அவர்களின் கர்ச்சனை..!

March 7, 2010

இன்று (07.03.2010) காலையில் "விஜய்" டிவியில் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் நிகழ்ச்சியினை கவனிக்க நேர்ந்தது; அதில் அவர் குறிப்பிட்ட ஒரு வசனத்தைச் சொன்னவிதம் என்னை மிகவும் கவர்ந்தது;

கிறித்தவர்களனைவருக்கும் தெரிந்ததான அந்த வசனமானது அவர் மூலம் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது; வசனம் இதுதான்:
"...பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே."(எபிரெயர்.12:14)

இதனை அவர் சொன்னவிதமாவது..,
Mohan%20C%20Lazarus.jpg
"
ஒரு கல்லை தெய்வமாக பாவித்து அலங்கரித்து யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம்; நீ கொலைக்காரனோ கொள்ளைக்காரனோ லஞ்சம் வாங்குபவனோ வேசிக்கள்ளனோ யார் வேண்டுமானாலும் ஒரு சிலையையோ தெய்வம் எனப்படும் ஒரு ஓவியத்தையோ அல்லது அதன் சிற்பத்தையோ எளிதாக தரிசிக்கலாம்;

ஆனால் இந்த உலகத்தைப் படைத்த தெய்வத்தை ஒரு மனுஷன் தரிசிக்கவேண்டுமானால் பரிசுத்தம் வேண்டும்; பாவத்துடனோ பாவத் தன்மையுடனோ பரிசுத்தரான அவரை தரிசிக்கவே முடியாது"

ஆம்,இந்த விளக்கம் மிகவும் எளிமையானது; "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" எனும் பழைய பாடலின் வரிகளைப் போல "சாமி தரிசனம்" என்று வசதிக்கேற்ப சாதா,ஸ்பெஷல்,தர்ம தரிசனம் வரிசையில் நின்று அடிபட்டு மிதிபட்டு எதைப் பார்த்து (கன்னத்தில் போட்டுக் கொண்டு..)வருகிறான்,மனிதன்..? வெறும் கல்லைத் தானே..!

அண்மையில் கூட உத்திரபிரதேசத்தில் பிரசாததுக்காக வெறும் பத்து ரூபாய் உணவு பொட்டலத்துக்காக நெரிசலில் சிக்கி  65 பேர் மாண்டனரே..!

பரிசுத்தரான- காணக்கூடாத- இதுவரை மாந்தரில் ஒருவரும் கண்டிராத  இறைவன் பரிசுத்த வேதாகமத்தில் அல்லவா வாழ்கிறார்..!

அந்த பரிசுத்த வேத எழுத்துக்களின் வழியே இறை ஒளியை அடைந்தால் கண்கள் திறக்குமல்லவா..?

சகோதரன் மோகன் சி லாசரஸ் அவர்கள் சிங்கத்தைப் போல சேலம் நகரின் பிரதான இடத்திலிருந்து கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் மத்தியிலிருந்து கர்ச்சித்தபோது எனது உள்ளம் ஆனந்தம் அடைந்தது;

எந்த ஒரு அரசியல்வாதியோ மதத் தலைவரோ இது போல சர்வவல்ல தேவனுக்காக சத்தியத்தை சத்தியமாக துணிவுடன் சொல்லமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை;

இந்த தேசம் அறியாமை இருளிலிருந்து சீக்கிரமே மீட்கப்படும் என்ற நம்பிக்கை ஒளி மனதில் தோன்றியது;

கர்த்தர்தாமே சகோதரனுக்கு தீர்க்காயுசைக் கொடுத்து அவர்தம் தரிசனங்களை நிறைவேற்றிட உளமார பிரார்த்திக்கிறேன்..!

No New Posts   28-நாடுகளுக்கு சுனாமி ஆபத்து,இன்றே 4 முறை இந்தியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்-ஒரு விண்ணப்பம்.

April 11, 2012

அப்பா பிதாவே!! அன்பு தேவனே!!

எங்கள் மேல் இரக்கமாயிரும். பயமுறுத்தும் காரியங்களை கேள்விபடுகிறோம். உமக்குள் எங்களை திடபடுத்தி கொள்ள கிருபை தாரும்..

அன்பு தேவனே!!எங்கள் பிதாவே!!

ஒருவர் முன்னிட்டு அநேகர் மேல் பொறுமையாய் இருக்கும் அன்பு தேவனே!! உம்முடைய நீதிக்காய் உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் அனைவரும் பாவிகள்,நீசர்கள். நீர் படைத்த உமது ஆலயமான எங்கள் சரீரத்தை நாங்கள் பாவங்களால் பரிசுத்த குலைச்சலாக்கி,அசுத்த கிரியைகளினால் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எங்கள் பாவங்களால் கோபமூட்டினோம்.

தேவரீர் எங்கள் மேல் இரக்கமாயிரும்.உமது நாமம் தரிக்கபட்ட எங்களை ரட்சியும். எங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் முகத்தை பார்த்து எங்கள் புத்திஈனத்திற்கு தக்கதாய் எங்களை நடத்தாதிரும்.அவரது பரிசுத்த ரத்தத்தினால் எங்களை கழுவும்.. தேவனே இப்போது புறஜாதிகளின் மத்தியில் வாழும் உம் அடியார்களாகிய நாங்கள் அனைவரும் நீசர்களே. தேவனே இரங்கும்!! தேவனே கவனியும்!! தேவனே உம்மை நோக்கி கெஞ்சும் உம் பிள்ளைகளின் விண்ணபத்தை கேளும்.

இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழும் எங்களுக்கு நம்பிக்கை நீர் மாத்திரமே.எங்களை உம் செட்டைகளுகுள்ளாக வைத்து காத்துக்கொள்ளும். நல்லோர் மேலும் தீயோர் மேலும் சூரியனை உதிக்கபண்ணும் தேவனே புறஜாதிகளுக்கும் இறங்கும்.

கடல் தன் கரையை மீறாதபடி எல்லையை கட்டளையிட்டுள்ள தேவனே எங்களை முன்னிட்டு அவைகள் கரையை மீறாத படி அதட்டும். எங்கள் கன்மலையே!!! உலரும் பூக்களை போல் நிலையற்றவர்களாகிய எங்கள் மேல் இரக்கமாயிரும்,ரட்சியும். தொடர் நிலநடுக்கங்களில் இருந்தும் சுனாமிகளில் இருந்தும் தேசங்களை காத்தருளும். உம் அநாதி இரக்கங்களை உம்மை நோக்கி விண்ணப்பிக்கும் எங்கள் நிமித்தம் நினைவுகூரும்.

எங்கள் விண்ணபத்திற்கு உம் செவிகள் திறந்திருந்து எங்கள் காரியம் கர்த்தால் கவனிக்கபட்டபடியினால் உமக்கு நன்றி!!


ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவின் நாமதிலும் பரிசுத்த ஆவியின் ஐக்கியதிலும் பிதாவே உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தை ஏறேடுக்கிறோம் -- ஆமென்.

 

கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றும் உள்ளது..

தேவனுக்கு எப்போதும் மகிமை உண்டாகுக!!!



-- Edited by JOHN12 on Wednesday 11th of April 2012 09:44:23 PM

No New Posts   சகோதரர் டி.அருள்ராஜ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்விடத்திலிருந்து...

February 20, 2012

சகோதரர் டி.அருள்ராஜ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்விடத்திலிருந்து...

சகோதரர் டி.அருள்ராஜ் அவர்களைக் குறித்து ஒரு சகோதரியின் சாட்சி...

No New Posts   உப்பு வியாபாரி..!

October 18, 2011



இந்த வீடியோவில் தோன்றும் நபர் ஒரு உப்பு வியாபாரி..!

நண்பர்களே ஆச்சரியப்படாதிருங்கள்,நான் உண்மையே சொல்லுகிறேன்; "உங்களுக்குள் உப்புடையவர்களாக இருங்கள்" என்று ஆண்டவர் சொன்னதைப் பின்பற்றி தன்னிடம் ஜெபிக்க வருவோருக்கு உப்பு மந்திரித்து கொடுக்கிறார்;  இவர் ஊழியம் செய்யும் பகுதியில் உப்பு விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா அக்கிரமமும் இந்த பாவியின் கவனத்துக்கா வந்து சேரணும்..?

No New Posts   நான் இயேசுவை காதலிக்கிறேன்

May 22, 2011

சமீபத்தில், பல காதல் கதைகளைக் கேட்டு, ஆவிக்குரிய சபையிலா இப்படி என்று அதிர்ச்சி அடைந்தேன். பல versions இருப்பதால் எது பொய் எது உண்மை என்று தெரியவில்லை. எனக்கு புரியாதது, எப்படி பெற்றோர் இவ்வளவு careless ஆக இருக்கிறார்கள்?

ஒரு முறை ஆண்டவர் எனக்கு சொன்னது, விளையாட்டுக்காக கூட,ஒரு ஆணையும், பெண்ணையும் சேர்த்து, கேலி பேசக் கூடாது. அப்படி யாரும் பேசினால், நீ அதில் கலந்து கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் ஏன் பல மூத்த கிறிஸ்தவர்களுக்கு கூட இல்லை என்று எனக்கு புரிவதில்லை. சர்வ சாதாரணமாக அவன் இவளை காதலித்தான். இவள் அவனை காதலித்தாள் என்று வாய் கூசாமல் (உண்மையோ,பொய்யோ...) சபையில் உள்ளவர்கள் பற்றியும் சொல்றாங்களே என்று எனக்கு வருத்தமாக இருக்கும்.

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்/பையன், இரட்சிக்கப்பட்ட பையன்/ பெண்ணைக் காதலிக்கலாமா?

கூடாது என்று தங்கத்தைக் கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை என்ற பாடலுக்கு சொந்தக்காரர் ராஜூ (பெங்களூர்) சொன்னார்.அருமையான தேவ மனிதர்.அவர் பேசுவதை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.காதல் கூடாது என்று, ஆபாச சினிமா படங்கள், பாடல்கள் பார்ப்பதை/கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இளம் உள்ளங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மிகவும் அருமையாக பேசினார். பரிசுத்த வாழ்க்கைதான் அதி முக்கியம் என்று பரிசுத்தத்தை மிகவும் வலியுறுத்திப் பேசினார்.(உங்க பகுதிக்கு அவரைக் கூப்பிட்டு வாலிபர் கூட்டம் நடத்த நான் சிபாரிசு செய்கிறேன்!)

பெங்களூரில் ஒரு முறை அவர் வண்டியில் போய் கொண்டிருந்தபோது, ஒரு பார்க் வந்தபோது, ஆண்டவர் உள்ள போய் பார் என்று சொன்னாராம். இவர் ஒரு சுற்று சுற்றி வைந்திருக்கிறார். பல காதல் ஜோடிகள் மரத்தடியில் கண்ணில் பட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு புதரை கடக்கும் போது,ராஜு பிரதர் மாதிரி தெரியுதே என்று ஒரு பெண் சத்தம் கேட்டிருக்கிறது. இவர் அது யாரென்று பார்க்காமல் வந்து விட்டாராம்.

கொஞச நேரம் கழித்து அந்த பெண் இவருக்குப் போன் பண்ணி, நீங்க அங்க வந்திருந்தீங்களா என்று கேட்க, இவர் ஆமாம் என்று சொல்ல, அது தன் சோகக் கதையை சொல்லியிருக்கிறது. அது 17 வயது நிரம்பிய கிறிஸ்தவ பெண். காதல் வலையில் சிக்கி, ஒரு முறை கருக்கலைப்பு செய்து, அவனிடமிருந்து தப்ப வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அழுததாம்.

இந்த மாதிரி பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று ஆண்டவர் கேட்டாராம். என்ன செய்யணும் என்று சொல்லுங்க என்று கேட்க, அடுத்த பாடல் கேசட்டில், இயேசுவை அதிகமாய் நேசிக்கச் சொல்லும் பாடல்களாய் எழுது என்று சொன்னாராம். நான் இயேசுவை காதலிக்கிறேன் என்ற பாட்டை ஆண்டவரே கொடுத்தாராம். காதல் கீதல் என்று இவன் தப்பு தப்பா எழுதுறான் என்று கேசட் வெளியிட வேண்டிய பாஸ்டர் மாட்டேன் என்று சொல்லி விட்டாராம். எல்லா கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் விற்கக் கூடாது என்று தடையும் போட்டுவிட்டார்களாம். அப்புறம் தடை மாறியது. பலர் அந்த கேசட் கேட்டு, உலக காதலை விட்டு, இயேசு கிறிஸ்துவை காதலிப்பவர்களாய் மாறியிருக்கிறார்கள் என்று சொன்னார். அடுத்த கேசட் தலைப்பு - WANTED - Dead to Sin, Alive For Christ - இதைத்தான் அதிகம் வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட ஊழியக்காரர்களைப் பார்ப்பது என்ன சந்தோஷம்..!

No New Posts   சமாதானப் பிரபுவான இயேசு உங்கள் வாழ்வில்..!

September 19, 2011

இன்று காலை (19.09.2011) 7 மணிக்கு தமிழன் டிவியில் சத்திய வசனம் நிகழ்ச்சியில் முகத்தை விழித்தேன்; நல்ல முதிர்ந்த அனுபவமும் வயதும் நிரம்பிய ஐயா எடிசன் அவர்களுடைய செய்தியானது மெய்யாகவே பயனுள்ளதாக இருந்தது; நேற்று மதியம் (மேசியாவின்) எதிரிகளுடனான நேரடி மோதல் காரணமாக மிகவும் சோர்ந்துபோயிருந்த எனக்கு இந்த செய்தியானது அதிக உற்சாகத்தைத் தந்தது;அதன் விவரத்தை சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்; இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக்கூடிய நேயர்களும் கருத்து கூறலாம்.

Prof.Edison.jpgProf.Edison%2B%25281%2529.jpg

  • இன்றைக்கு பலரும் தங்கள் பிரச்சினைகளில் சமாதான பிரபுவான இயேசுவின் உதவியை நாடுகிறதில்லை;கணவன் மனைவியிடையிலான பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஈகோ எனப்படும் விட்டுக்கொடுக்காத தன்மையே காரணம்;ஈகோ (EGO) எனும் வார்த்தையிலுள்ள E-G-O ஆகிய எழுத்துகளுக்கு " Edging- GOD- Out " ஆகிய மூன்று வார்த்தையைச் சொல்லலாம்; அதாவது பிரச்சினைகளின் போது ஆண்டவருக்கு இடம் தராமல் அவரைத் தள்ளிவிடுவது;சமாதானக் காரணரான அவரே இல்லாவிட்டால் சமாதானம் எப்படி வரும்?
  • இப்படியே வயதான தகப்பன் ஒருவர் தான் மரிக்கும் தருவாயில் த்ன்னிடம் இருந்த ஒரே சொத்தான 17 ஒட்டகங்களைத் தனது மூன்று மகன்களும் சண்டை சச்சரவு இல்லாமல் பிரித்து எடுத்துக்கொள்ளும்படியாகவும் சமாதானத்துடன் வாழும்படியும் புத்திமதி கூறிவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார்;அவர் சொன்னது என்னவென்றால் அந்த 17 ஒட்டகங்களையும் மூத்தவனுக்கு இரண்டில் ஒரு பங்கும் அடுத்தவனுக்கு மூன்றில் ஒரு பங்கும் இளையவனுக்கு ஒன்பதில் ஒரு பங்குமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே;17 ஒட்டகங்களை சமமாகப் பிரிப்பதே சிரமமெனில் இந்த சிக்கலான பங்கை எப்படி நிறைவேற்றி தகப்பனின் ஆத்துமாவை சாந்தியடையவைப்பது,என்று சகோதரர்கள் மிகவும் குழம்பிப்போனார்கள்;இந்த சச்சரவை தீர்த்துவைக்கச் சொல்லி ஊரிலிருந்த பெரியவர் ஒருவரின் உதவியை நாடினார்கள்;இதுபோன்ற பல பிரச்சினைகளைத் தீர்த்துவைத்த அனுபவமுடைய அவரும் மிக எளிமையாக தீர்வைச் சொல்லி சகோதரர்களை நிம்மதியடையச் செய்தார்.

செய்தியின் முடிவில் இந்த வாரம் முழுவதும் நான் தியானித்துக்கொண்டிருந்த பிலிப்பியர்.4:8 ஐக் கூறி அழகாகவும் சுருக்கமாகவும் ஜெபித்து முடித்தார். காணிக்கையைக் குறித்தோ ஊழியத்தைக் குறித்தோ எந்த பெருமையுமில்லாமல் செய்தி அளித்தவரும் பிரபலமானவராக பந்தாவாக இல்லாமல் எளிமையாக இருந்து ஆனால் உள்ளத்தைத் தொடும் ஒரு செய்தியைக் கொடுத்தது தனிச்சிறப்பு.

  • "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்." (பிலிப்பியர்.4:8)

அந்த முதியவர் சொன்ன தீர்வு என்ன, பிரச்சினை எப்படி தீர்ந்தது என்பதை வாசகர்கள் சொல்ல வாய்ப்பளித்து காத்திருக்கிறேன்..!

சத்திய வசனம்: SATHIYAVASANAM India | BACK TO THE BIBLE | The Good News Broadcasting Society | Madurai, Tamil Nadu, South India

No New Posts   இறைவன் இயேசுவின் பூஜாரியா பால் தினகரன்?

September 16, 2010

நம்முடைய தேசத்தில் கிறித்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதில் அதிகம் பயன்பட்டது இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடும்;அவர்கள் மூலம் அநேக மக்கள் தொடர்ந்து ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு நெருங்கிவருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே;

சகோ.DGS.தினகரன் அவர்களது மறைவுக்குப் பிறகு அண்மைக்காலத்தில் சகோ.பால் தினகரன் அவர்களுடைய ஊழிய பாணியானது மாற்றமடைந்து வருவதைப் பலரும் கவனித்திருக்கலாம்;அவர் ஏதோ ஒரு விஷயத்தில் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள எண்ணி அதற்கான முயற்சியாக தனது தந்தையான சகோ.
DGS.தினகரன் அவர்கள் மறைந்ததுமே சில புதிய காரியங்களை அறிவித்தார்;தனக்கு அப்போஸ்தல தீர்க்கதரிசன அபிஷேகம் ஊற்றப்பட்டிருப்பதாகவும் அதைக் கொண்டு அநேகரை இறைவன் இயேசு அபிஷேகிக்கச் சொல்லியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்;அவருடைய ஊழிய ஸ்தாபனமானது (ஆம்,அதிலென்ன சந்தேகம்..?) அவர்தம் தந்தையாரின் முயற்சியினாலோ "இறைவன் இயேசு"வின் (?) திருவருளாலோ எந்தவித பொருளாதார சிக்கல்களும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது;அதன் அடையாளமாக தேசமெங்கும் நிலங்கள் வாங்கப்படுகிறது;பத்திரம் கையெழுத்தாகிறது; கோபுரங்கள் எழுப்பப்படுகிறது;இவையெல்லாம் ஏற்கனவே இறைவன் இயேசு உரைத்த தீர்க்கதரிசன நிறைவேறுதல்களாகவே  இருக்கட்டும்,எந்த பிரச்சினையுமில்லை;

ஏனெனில் எரேமியா.32:44 ல் சொல்லப்பட்ட வசனம் இவர்களுக்காக சொல்லப்பட்டதாகவே தோன்றுகிறது;ஆனால் அவை பொதுசொத்தாக வாங்கப்படாததுதான் சங்கடமாக இருக்கிறது;

"பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்."(எரேமியா.32:44)

அதுவும் போகட்டும்,அண்மையில் டெல்லி அருகே பாராளுமன்ற கட்டிடத்துக்கு மிக அருகில் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு ஜெப கோபுரத்தின் திறப்பு விழாவின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு புகைப்படத்தில் நம்முடைய இறைவன் இயேசு ஏதோ ஒரு மூடில் நம்மைப் பார்த்து முறைக்கிறார்;

10a.jpg
http://www.prayertoweronline.org/events/dptopening2010.html


இதனைக் கண்டதும் எனக்கு பல யோசனைகள் வந்துபோனது; இதனைக் கண்டிப்பதா,கண்டும் காணாமல் விட்டுவிடுவதா எனக் குழப்பம் ஒருபுறமும் நம்முடைய அருமை சகோதரரை எல்லோருமே கண்டு(டி)க்காமல் விட்டு விட்டால் அவர்மீது இருப்பதாக அவர் சொல்லிக்கொண்டிருக்கும் அப்போஸ்தல தீர்க்கதரிசன அபிஷேகம் டேமேஜ் ஆகுமே என மறுபுறமும் தவித்துப் போனேன்;

ஏனெனில் ஒரு படிப்பறிவில்லாத தாயார் என்னிடமே ஒரு சமயம் கேட்டார்கள், நம்ம ஆண்டவரை ஏன் இதுபோல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வரைகிறார்கள்;நாமெல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கிறோம்,அவருக்கு மட்டும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாதிரி
முகம் இருக்கிறதே என‌;

அப்படியானால் அந்த தாயாரைப் பொறுத்தவரையிலும் ஆண்டவருக்கென்ற ஒரு உருவம் இருக்கும் எனவும் அது வெவ்வேறாக இருக்கும் போது எந்த உருவத்தை மனதில் நிறுத்தித் தொழுவது என்றும் குழம்புகிறார்கள்;

33a.jpg

http://www.prayertoweronline.org/events/dptopening2010/images/33a.jpg

ஒரு காரியத்தைச் சொல்லும்போது அது எளிதில் புரியும் வண்ணமாக‌
அதனை ஒரு சித்திரம் மூலம் வரைவது வழக்கமான நடை,முறைதான்;ஆனாலும் அப்போஸ்தல தீர்க்கதரிசன அபிஷேகத்தையுடையவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் நம்முடைய சகோதரன் எப்படி கர்த்தருடைய பிரசன்னத்தை நாடி மக்கள் வரும் ஜெபக் கூடத்தில் ஆண்டவருடைய உருவத்தை சித்தரிக்கும் ஏதோ ஒரு படத்தை வைக்கலாம் என்பதே நம்முடைய கேள்வி;

image010.jpg

கீழ்க்காணும் வேதப் பகுதியில் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் மாறாத வேதபகுதியை வாசக நண்பர்கள் கவனித்து தங்கள் கருத்தைப் பதிவுசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்.

Deu 4:7  நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

Deu 4:8  இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?

Deu 4:9  ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,

Deu 4:10  உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.

Deu 4:11  நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

Deu 4:12  அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை.

Deu 4:13  நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

Deu 4:14  நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.

Deu 4:15  கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.

Deu 4:16  ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,

Deu 4:17  பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,

Deu 4:18  பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,

Deu 4:19  உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். (உபாகமம்.4:7 முதல் 19 வரை)

இந்த கொள்கையானது எப்போது திருத்தப்பட்டது என்பது விளங்கவில்லை; ஒருவேளை இது பிதாவாகிய தேவனுக்கே பொருந்தும் என்பார்களோ? அப்படியானால் அவரையும் தள்ளிவிட்டு இறைவன் இயேசு என்று தானே மீண்டும் மீண்டும் விளிக்கிறார்கள்;

பிதாவின் ஸ்தானத்தை இயேசுவுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவானரின் கிறிஸ்து எனும் ஸ்தானத்தை சிலர் எடுத்துக்கொண்டு போட்ட ஆட்டங்களும் அதன் தற்கால விளைவுகளையும் குறித்த ஒரு ஆய்வு கட்டுரையை விரைவில் எதிர்பாருங்கள்;

இங்கே தங்கள் பின்னூட்டத்தை இடமுடியாதோர் எனது வலைப்பூக்களுக்குச் சென்று அங்கே தங்கள் மேலான கருத்தை தெரிவிக்கலாம் அல்லது எனது மின்னஞ்சல் முகவரிக்கும் செய்தியனுப்பலாம்.

http://chillsams.blogspot.com/2010/09/yauwana-janam_7333.html

No New Posts   அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம்

May 15, 2011

அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம் பற்றிய அந்த வீடியோ போஸ்ட் பண்ணிய சகோதரருக்கு நன்றி. வின்செண்ட் செல்வகுமார், சாதுவை குறை பேசியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறேன்.

 

No New Posts   ஐரோப்பிய நாடுகளில் மங்கிய நிறமுள்ள குதிரை

July 25, 2011

சாது சுந்தர் செல்வராஜ் சமீபத்தில் “குணமாக்கும் அன்பு” நிகழ்ச்சியில் சொன்னது :

எகிப்தில் காணப்பட்ட மங்கிய குதிரை ஐரோப்பிய நாடுகளில் செல்லும்.

அங்கு கலவரம், இரத்தம் சிந்துதல் உண்டாகும். அதன் பிரதிபலிப்பு ஐரோப்பாவின் தென் பகுதியில்(மத்திய கிழக்கு நாடுகள்?) உள்ள நாடுகளில் காணப்படும்.

***

லூக்கா 21

16. பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.

17. என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

நிறைவேறும் காலம் வந்தாச்சு போல தெரியுது.

***

இது கடைசிக் காலம் என்று தெளிவு படுத்தும் ஒரு கட்டுரை!

Fundamental terror,..really?

http://www.zionfire.org/fundamental-terror-really/

--

I wasn’t going to write about this but I really feel compelled to write about the massacre that occurred yesterday in Norway. I believe this was a turning point in the events leading up to the final end time events as described in the Bible. This morning when I first read the news about the attack I was surprised to see already that the attacker was pegged as a ‘right-wing’, ‘anti-Muslim’, gun club member. It seemed odd to me that they already had that kind of information about the man and that it was the first thing they wanted to say about him. I could already tell that this attack was going to be used politically to begin targeting and singling out certain types of people in society. I mean it wasn’t hours after the tragic deaths of over 80 young people and the topic they want to print in the news is the political and philosophical views of the killer? I knew as soon as I made the connection that it wasn’t going to be more than a day or so and they would peg the guy as a ‘Christian’ and of course we all know that ‘right wing’, ‘anti-Muslim’(this label is for anyone that is against Islamic agenda), gun owning, Christians are prone to be mass murdering terrorists.

Sure enough, a couple of hours after I first read the article I typed in a search for ‘Fundamentalist Christian’,…The Norway incident was the first topic on the Yahoo search engine. And of course there was the Article, ‘Norway suspect Fundamentalist christian’. This is a sign of the times folks, things are speeding up. In Nazi Germany the persecution of the Jews began with the German Government identifying the Jews as a problematic people. In our times it will be ‘Fundamentalist Christians’ who are identified as the problem. Why ‘Fundamentalist’? Because they will want to exclude from persecution all the ‘trendy Christians’ who are at peace with the New World Order and the New World Religion. In fact those kinds of Christians will want to promote and be a part of an all inclusive New World Religion, a religion that says there are many paths to God and that Jesus is only one of the many ways, you know, because they are so loving and peaceful. But the Fundamentalist,…eeeewwww, those are the evil Christians that believe Jesus is the Truth the Life, and the Way and that no one comes to the Father(God) except by Jesus. Fundamentalist believe that the Bible is literally true, and that the Word of God is to be believed as it is written. Why Fundamentalists are ‘extreme’. You know, those Christians who believe that their relationship with God and their loyalty to Gods Word comes first and foremost over and above any other loyalty including that persons loyalty to their Government. Yep those guys are going to be a problem for the anti-christ because they will expose all of his evil stuff as long as they are given a voice or a pen(or a computer). So they will have to be silenced. The Bible says that in the last days the beast will make war with the saints and overcome them.

.....

--

No New Posts   கேட்க மிக அருமையான பாடல்.

June 18, 2011

இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

நீர் எனக்கு போதும் - 4
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் தஞ்சம் -2
இயேசுவே நீர் எனக்கு போதும்  -2


என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2   நீர் எனக்கு

தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – 2
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – 2    நீர் எனக்கு



 

[video=www.youtube.com/watch?v=O2WSlYTtonU]

 

www.youtube.com/watch?v=O2WSlYTtonU



-- Edited by sjchristopher on Saturday 18th of June 2011 06:48:41 PM
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Forum Information
Total Posts: 229
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard