Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் தேவ மனிதன்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
யார் தேவ மனிதன்..?
Permalink  
 


"தாங்கள் ஒரு நல்ல தேவ மனிதன்" என்று அண்மையில் ஒரு நண்பர் என்னைக் குறித்து குறிப்பிட்டார்; இது எத்தனை பெரிய டைட்டில், இதை எப்படி ஏற்கமுடியும்..? குருவி தலையில் பனங்காயை வைத்தது போல, "தேவனுடைய மனுஷன்" எனும் டைட்டிலை எப்படி என்னால் சுமக்க முடியும்; கொஞ்சம் கொச்சையாக சொல்லுகிறேன், எங்காவது ஊழியத்துக்காக சென்ற இடத்தில் இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்குக் கூட கூச்சமாக இருக்கும்; நான் ஒரு தேவ மனிதனாக மதிப்புக்குரியவனாக இருந்தாலும் அனுதினமும் ஐம்புலன்களோடு போராடவேண்டியதாக இருக்கிறது..?

ஆனாலும் சிலர் தங்களை ரெவரெண்ட் என்று ரென்ட்டுக்கு வாங்கிய பட்டத்தைப் போட்டுக்கொள்ளும்போது உண்மையிலேயே பயமாக இருக்கிறது; யாரைப் பார்த்து, பட்டத்தைப் போட்டுக்கொண்டிருப்பவரைப் பார்த்துதான். இந்த ரெவரெண்ட் என்ன கதியாகப் போகிறாரோ, யார் யாரை என்ன கதியாக்கப் போகிறாரோ, என்று.

ஏரோது ராஜாவையே நேருக்கு நேராகக் கண்டித்த -கலங்கடித்த‌ திருமுழுக்கினர் யோவான் இயேசு ராஜாவின் பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கே பாத்திரனல்ல என்கிறான்; ஆனால் கிட்ட வா என்றால் மூஞ்சை நக்குமாம் நாய் போல, அவரோடு சமமாக அமரவைத்திருக்கிறார் என்ற ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அவருடைய மடியிலேயே சென்று உட்காருவதற்கு அடம்பிடிக்கும் சில ரெவரெண்டுகளும் உண்டு; இயேசுநாதர் கொஞ்சம் ஏமாந்தால் அவருடைய நாற்காலிக்கே போட்டிபோடுவார்கள்; ஏனென்றால் அவரைக் காட்டிலும் அதிகமான அற்புதங்களை (?) செய்வதாக இவர்களுக்கு எண்ணம்..! யோவான்.14:12 ல் அவர் சொன்னதோ கிரியைகள் இவர் நினைத்துக்கொண்டிருப்பதோ அற்புதங்கள்... ஊறுகாயை உணவாக மூன்று வேளையும் குடும்பமாக உட்கார்ந்து உண்பார்களோ..?

"தேவ மனிதன்" என்ற பட்டத்தை எதன் மூலம் ஒருவன் பெறமுடியும், அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டுவதன் மூலமா..? தெரியவில்லை.

என்னை "தேவ மனிதன்" என்று சொன்ன அண்ணனிடம் நான் சொன்னேன், என்னண்ணே இது அக்கிரமமா இருக்கு... பாவ மனிதன் எப்படி "தேவ மனிதன்" ஆகமுடியும்..? (...) என்னுடைய நண்பர் என்று நினைத்ததே தவறாகப் போய்விட்டதே...என்னைப் போன்ற மோசமானவர்களை நேசிப்பதற்காகவே உங்களைப் போன்ற தூதர்களை ஆண்டவர் அனுப்பியிருக்கிறார் போலும்; சுத்தமுள்ளவர்களுக்கு சகலமும் சுத்தமாகத் தோன்றும் என்று வேதம் சொல்லுவது போல எனது நண்பர் கள்ளங்கபடற்ற மனிதராக இருப்பதால் என்னை "தேவ மனிதன்" என்று உங்களிடம் சொல்லியிருக்கிறார்;

தேவன் என்னில் வாழ்கிறார்;அவர் என்னில் வாழும் காரணத்தினால் பாவம் செய்வதை நிறுத்தியிருக்கிறேன்; மற்றபடி நான் பாவஞ் செய்யாதிருப்பதால் மட்டுமே நான் தேவ மனிதனாகிவிட‌ முடியுமா..?  நான் மரித்து என் இராஜாவை சந்தித்து அவரால் அவருடைய வீட்டில் சேர்த்துக்கொள்ளப்படும் வரைக்கும் நான் பாவ மனிதனே; எனவே இன்று என்னப்படுமளவும் உணர்த்தப்படுகிறேன்;  ஏசாயா.38:15 ல் எசேக்கியா சொல்லுவதுபோல, என் ஜீவனுள்ள நாளெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை மறவாதிருந்தாலே தேவன் என் தகுதியற்ற என்மீது பாராட்டிய அவர்தம் கிருபையின் மேன்மை விளங்கும்;

என் வீட்டுக்கு ஒரு அமைச்சர் வந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், உடனே என் வீடு அமைச்சர் வீடாகி விடுமா..? புரியவில்லை, அண்ணன்; அவர் என்னில் ஜீவிக்கும் வரை நான் பிழைத்திருப்பேன்; மற்றபடி எனக்கென்று எந்த மேன்மையும் இல்லை; சொல்லிக்கொள்ளும்படி சொந்தங்களும் இல்லை; எனதருமை நண்பர் (...) அவர்களை ஒருமுறை சந்திக்கும் அரிய வாய்ப்பை அண்மையில் இழந்தேன்; உங்களையும் சந்திக்கும் ஆவல் உண்டு; என்றாவது ஒரு நாள் யாரோ போல் வந்து உங்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுப்பேன்; அதுவரை வழிப்போக்கனாகவே இருக்கிறேன்..!" என்று சொன்னேன்;

அவர் என்ன நினைத்திருப்பாரோ, நாம் நினைப்பதையெல்லாம் சொல்லிவிடமுடிகிறதா என்ன, அல்லது ஒருவர் நினைப்பதையெல்லாம் அறியத் தான் முடிகிறதா..? இந்த லட்சணத்தில் மற்றொருவர் நினைக்காததை அவர் நினைப்பதாக எண்ணி அவருக்கு எதிராக பல காரியங்களை நினைக்கிறோம்; இப்படியே எனது நண்பர் எனது நீண்ட "லொட... லொட.." பதிலைப் படித்துவிட்டு இவனை ஏன் தான் "தேவ மனிதன்" என்று சொன்னோமோ நினைத்திருப்பார் என்று நான் நினைப்பதை அவர் அறிந்தால் என்ன நினைப்பாரோ..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard